பத்திரப்பதிவு துறை சரவெடி.. நில அளவை பிரிவு, வழிகாட்டி மதிப்பு.. இப்படியொரு பிளான் இருக்கா? பலே பலே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரப்பதிவு துறையில் பல்வேறு அதிரடிகளை தமிழக அரசுசெய்து வரும்நிலையில், புதிய தகவல் ஒன்று வட்டமடித்து வருகிறது.

கடந்த 2022 - 23 ஆம் ஆண்டு, நிதியாண்டில் பத்திரப்பதிவின் மூலம், கிட்டத்தட்ட 17,296 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. பிறகு 2023 - 24 நிதியாண்டில், 20,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Tamil Nadu Registration Department TN Government

அந்தவகையில், இந்த 2024ம் வருடமும், ரூ.25,000 கோடி வருவாய் இலக்கினை நிர்ணயித்திருக்கிறது. இந்த இலக்கினை எட்டுவதற்காக பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், வசதிகளையும் பதிவுத்துறை பொதுமக்களுக்காக செய்து தந்து வருகிறது.

அதிக விற்பனை: சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருவதிலும் நல்ல பலன் கிடைத்து வருகிறதாம். கடந்த பிப்ரவரி இறுதி வரையிலான நிலவரப்படி, 18,000 கோடி ரூபாயை தாண்டி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. எனினும், தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்ததால், பதிவுக்கு வரும் பத்திரங்களின் எண்ணிக்கையில் மார்ச் மாதம் சற்று சரிவு ஏற்பட்டுவிட்டதாக காரணம் கூறப்பட்டது.

ஆனால், அடுத்தடுத்த சில நாட்களிலேயே மீண்டும் பதிவுத்துறை இலக்கினை எட்டும் நோக்கில் தீவிரமாகி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு தகவலும் வட்டமடித்து வருகிறது. அந்தவகையில், பதிவுத்துறையை வணிக வரி துறையிலிருந்து பிரித்து, தனி செயலர் தலைமையில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிதாக கோரிக்கை தற்போது எழுந்துள்ளதாம்..

பத்திரங்கள்: அதாவது நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, சொத்து பத்திரங்களை பதிவு செய்வதற்காக 582 சார் - பதிவாளர் அலுவலகங்களும், இவைகளை நிர்ணயிக்க 54 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள், 10 மண்டல அலுவலகங்களும் உள்ளன... எனவே, பத்திரப்பதிவு துறை பணிகள் பெரும்பாலும், வருவாய் துறை பணிகளுடன் இணைந்து போகும் வகையில் உள்ளதுடன், சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யும் நிலையில், பட்டா உள்ளிட்ட விஷயங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது..

ஆனால், வணிக வரித்துறை என்பது விற்பனை வரி மற்றும் சரக்கு சேவை வரியான ஜிஎஸ்டி ஆகியவற்றை கவனித்து வரும் துறையாகும்.. வணிகவரி துறைக்கும், பதிவுத்துறைக்கும் களநிலையில் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றாலும், இந்த 2 துறைகளின் பணிகள் விஷயத்தில், ஒரே செயலரே முடிவுகளை எடுத்து வருகிறார்.

புதிய கோரிக்கை: எனவே, பதிவுத்துறையை வணிக வரி துறையிலிருந்து பிரித்து, தனி செயலர் தலைமையில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை புதிதாக எழுந்துள்ளதாம்.

வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் உள்ளிட்ட விஷயங்களில், துணை கலெக்டர் நிலையில், வருவாய் துறையினரால் தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதால், இதுபோன்ற ஒருங்கிணைப்பு பணிகள் அவசியமாகின்றன என்றும் வருவாய் துறையில், நில அளவை பிரிவு தனித்தன்மை இழக்காமல் இணைந்திருப்பதை போல, பதிவுத்துறையும் இணைக்கப்பட்டால், பல்வேறு விஷயங்களில் விரைவாக முடிவுகள் எடுக்கலாம் என்றும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றனவாம்.

எனினும், இதுகுறித்து தமிழக அரசு என்ன முடிவெடுக்க போகிறது என்று தெரியவில்லை... பதிவுத்துறைக்கு தனி செயலரை நியமிக்குமா? அல்லது வருவாய் துறை செயலரின் கீழ் இணைக்குமா? என்று தெரியவில்லை..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+