அவசரப்பட்ட அமெரிக்கா.. வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி - கவிஞர் வைரமுத்து
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நேற்று அதிகாலையில் திடீரென தாக்குதலில் ஈடுபட்டது. இந்நிலையில், ஈரானின் அணுசக்தி தளங்களில் டொமாஹக் ஏவுகணைகள் வீசி அவசரப்பட்டுவிட்டது அமெரிக்கா. வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே கடும் மோதல் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் கோரிக்கையை ஏற்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த மோதலுக்குள் அமெரிக்காவும் நுழைந்துள்ளதால் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேல் நாட்டின் மூன்று அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், ஈரானின் அணுசக்தி தளங்களில் டொமாஹக் ஏவுகணைகள் வீசி அவசரப்பட்டுவிட்டது அமெரிக்கா. வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
உலகின் தலையில்
மெல்லிய இழையில்
ஆடிக்கொண்டிருக்கிறது
அணுகுண்டு
"வக்கிர மனங்களால்
உக்கிரமாகுமோ யுத்தம்"
கலங்குகிறது உலகு
ஈரானின்
அணுசக்தித் தளங்களில்
டொமாஹக் ஏவுகணைகள்வீசி
அவசரப்பட்டுவிட்டது
அமெரிக்கா
வல்லரசுகள்
நல்லரசுகள் ஆகாவிடில்
புல்லரசு ஆகிவிடும்
பூமி
தான் கட்டமைத்த நாகரிகத்தைத்
தானே அழிப்பதன்றி
இதுவரை போர்கள்
என்ன செய்தன?
போரிடும் உலகத்தை
வேரொடு சாய்ப்போம்
அணுகுண்டு முட்டையிடும்
அலுமினியப் பறவைகள்
அதனதன் கூடுகளுக்குத்
திரும்பட்டும்
என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார். கடும் மோதலுக்கு நடுவே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கியுள்ளதால் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி ரஷிய அதிபர் புதினுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதுதொடர்பாக இஸ்தான்புல்லில் நேற்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி செய்தியாளர்களிடம் கூறுகையில், இஸ்ரேல், அமெரிக்கா எங்களது நாட்டின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கி எல்லையை மீறிவிட்டனர். இது ஆபத்தான தாக்குதலாகும். அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக ஈரான் தங்களைப் பாதுகாக்கும். இன்று ரஷ்யா தலைநகரான மாஸ்கோவிற்கு செல்கிறேன். ரஷ்ய அதிபர் புதினை ஜூன் 23 ஆம் தேதி சந்தித்து இந்த தாக்குதல் தொடர்பாக தீவிரமான ஆலோசனை நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
முடிவுக்கு வரும் ஈரான் போர்? இஸ்ரேல் பிரதமர் சொன்ன "அந்த" ஒரு வார்த்தை! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஹார்முஸ் ஜலசந்திக்கு பாதுகாப்பு அளிக்க தயார்.. ஒன்று கூடிய 20 நாடுகள்! ஈரானுக்கு எகிறும் பிரஷர் -
அமீரகத்தில் குண்டு விழுந்தால் அமெரிக்கா அலறுவது ஏன்.. ஈரான் கையில் எடுத்துள்ள பகீர் திட்டம்! -
பெரிதாகும் போர்? அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ளே வரும் பிரிட்டன்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்! -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்! -
குடிநீர் விலை தாறுமாறு உயர்வு.. தமிழ்நாட்டில் 1 லி பாட்டில் ரூ.3, 20 லி கேன் ரூ.5 விலை உயர்வு! -
4 மணி நேரம் கூட ஆகல.. திமிராக மிரட்டிய ஈரான் ராணுவ அதிகாரியை.. குறிவைத்து தூக்கிய இஸ்ரேல்! -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications