நாளை அரசு ஊழியர்களுக்கு நோ லீவ்.. விடுப்பு எடுத்தால் கடும் நடவடிக்கை.. தலைமைச் செயலாளர் எச்சரிக்கை
ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தமிழகத்தில் எந்த அரசு ஊழியரும் நாளை போராட கூடாது என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தமிழகத்தில் எந்த அரசு ஊழியரும் நாளை போராட கூடாது என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் தமிழகத்தில் கொதிப்பான நிலை உருவாகி இருக்கிறது. இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் கடந்த ஜனவரி 22ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
இந்த போராட்டத்திற்கு இன்னும் வேறு சில அரசு ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார். நீதித்துறை பணியாளர்களும், தலைமைச் செயலக ஊழியர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.

என்ன அறிக்கை
இந்த நிலையில் தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தலைமைச் செயலக ஊழியர்கள் கண்டிப்பாக நாளை பணிக்கு வர வேண்டும். இல்லையெனில் மிக கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

பணி நீக்கம்
ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக பகுதிநேர மற்றும் தினக்கூலி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்.

முக்கியம்
எந்த துறையிலும் யாரும் விடுப்பு எடுக்க கூடாது. மிக முக்கிய தேவைக்கு மட்டுமே விடுப்பு எடுக்க அனுமதி. நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது. அனைத்து துறையும் நாளை கண்காணிக்கப்படும்.

என்ன உத்தரவு
ஊழியர்களின் வருகை பதிவை நாளை காலை 10.30 மணிக்கு அனுப்ப வேண்டும். அனைத்து துறையினரும் கண்டிப்பாக இதை அனுப்ப வேண்டும். இல்லையென்றால் மிக கடுமையான நடவடிக்கை பணியாளர்கள் மீது எடுக்கப்படும் , என்று கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications