நாளை அரசு ஊழியர்களுக்கு நோ லீவ்.. விடுப்பு எடுத்தால் கடும் நடவடிக்கை.. தலைமைச் செயலாளர் எச்சரிக்கை
ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தமிழகத்தில் எந்த அரசு ஊழியரும் நாளை போராட கூடாது என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தமிழகத்தில் எந்த அரசு ஊழியரும் நாளை போராட கூடாது என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் தமிழகத்தில் கொதிப்பான நிலை உருவாகி இருக்கிறது. இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் கடந்த ஜனவரி 22ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
இந்த போராட்டத்திற்கு இன்னும் வேறு சில அரசு ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார். நீதித்துறை பணியாளர்களும், தலைமைச் செயலக ஊழியர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.

என்ன அறிக்கை
இந்த நிலையில் தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தலைமைச் செயலக ஊழியர்கள் கண்டிப்பாக நாளை பணிக்கு வர வேண்டும். இல்லையெனில் மிக கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

பணி நீக்கம்
ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக பகுதிநேர மற்றும் தினக்கூலி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்.

முக்கியம்
எந்த துறையிலும் யாரும் விடுப்பு எடுக்க கூடாது. மிக முக்கிய தேவைக்கு மட்டுமே விடுப்பு எடுக்க அனுமதி. நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது. அனைத்து துறையும் நாளை கண்காணிக்கப்படும்.

என்ன உத்தரவு
ஊழியர்களின் வருகை பதிவை நாளை காலை 10.30 மணிக்கு அனுப்ப வேண்டும். அனைத்து துறையினரும் கண்டிப்பாக இதை அனுப்ப வேண்டும். இல்லையென்றால் மிக கடுமையான நடவடிக்கை பணியாளர்கள் மீது எடுக்கப்படும் , என்று கூறியுள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications