ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு! சூழலை கெடுக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை! -ஜவாஹிருல்லா
சென்னை: ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சூழலை மாசுப்படுத்தும் கோராமண்டல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எச்சரிகையாக அமையும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது;
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சி மனமாற வரவேற்கிறது.

தொழில்துறை நலன்களை விட நமது உள்ளூர் சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை இந்தத் தீர்ப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வேதாந்தாவின் தொடர்ச்சியான மற்றும் அபாயகரமான சூழல் ரீதியாற மீறல்களை உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பில் ஒப்புக் கொண்டுள்ளது. இத்தீர்ப்பு தூத்துக்குடியில் மக்களின் போராட்டத்தின் வெற்றிக் குரலாக எதிரொலிக்கிறது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் இன்று வழங்கியுள்ள இந்த நுண்ணறிவுமிக்க தீர்க்கமான இந்தத் தீர்ப்பிற்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வழக்கை முன்வைத்து விடாமுயற்சியுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் செயல்பட்டுள்ளார். அவருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றி.
தமிழ்நாடு அரசின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், கோபால் சங்கரநாராயணன் ஆகியோருக்கும் தூத்துக்குடி மக்களின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் யோகேஸ்வரன் மற்றும் பூங்குழலி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோலின் கன்சால்வஸ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்பிப்பதில் வழக்குறைஞர்களுக்கு பெரும் உதவிகளை புரிந்துள்ள மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குனர் ஹென்றி திபேனுக்கும் எமது நன்றி.
தமிழ்நாடு அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட தெளிவான வாதம் உண்மையை வெளிக்கொண்டு வருவதிலும், தூத்துக்குடி மக்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றியுள்ளன.
இந்தத் தீர்ப்பு, பெருநிறுவன நலன்களை விட நமது கூட்டு நலன் முதன்மை பெறுகிறது என்பதை உறுதிப்படுத்தும் ஓர் ஒளிக்கீற்றைப் பாய்ச்சியுள்ளது. இந்தத் தீர்ப்பு தூத்துக்குடியின் ஆரோக்கியமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். சூழலை மாசுப்படுத்தும் கோராமண்டல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எச்சரிகையாக அமையும்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications