மீண்டும் ராஜினாமா கடிதம் கொடுத்த கே. பாக்யராஜ்.. அதிர்ச்சியில் எழுத்தாளர் சங்கம்!
சென்னை: எத்தனையோ முறை வற்புறுத்தியும், பேசியும் பார்த்தபிறகும் கே.பாக்யராஜ் மீண்டும் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதால் அச்சங்கத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய இருப்பதாக பாக்யராஜ் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். ஏற்கனவே அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தை சங்கத்தினர் ஏற்காத நிலையில், மீண்டும் ராஜினாமா கடிதம் கொடுத்திருப்பதால் சங்கத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
[பாடித் திரியட்டும் பறவைகள்.. தொல்லை தராத கிராமம்.. பட்டாசு வாடையே அறியாமல் 24 வருடம்]

முழு ஆதரவு
செங்கோல் மற்றும் சர்க்கார் பட பிரச்சனையில் சமரச பேச்சுவார்த்தைக்கு டைரக்டர் முருகதாஸ் உடன்படாததால் சென்னை ஐகோர்ட்டில் வருண் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். கதையின் கரு வருணுடையது என்பது தெளிவாக தெரிந்ததால், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவரும், இயக்குனருமான பாக்கியராஜ் வருணுக்கு பக்கபலமாக இருந்தார். முழு ஆதரவு அளித்தார்.

பிரச்சனை தொடர்ந்தது
இதன் காரணமாக பாக்யராஜ் மீது முருகதாஸ் பழி, குற்றம், அவதூறு என வாரி இறைத்தார். வருணுக்கு சப்போர்ட் செய்து பேசுவதாக கூறினார். அதேபோல முருகதாஸ் பக்கமும் சில இயக்குனர்கள் ஆதரவாகவும் பாக்யராஜுக்கு எதிராகவும் நின்றனர். ஒருவழியாக உண்மையை முருகதாஸ் ஒப்புக்கொண்டதுடன், வருண் ராஜேந்திரன் பெயரை டைட்டில் கார்டில் போடுகிறேன் என்றும் சொல்லி விட்டார். ஆனாலும் பாக்யராஜூக்கு பிரச்சனை இருந்து கொண்டே இருந்தது.

கொந்தளித்தனர்
அவரை சுற்றியே சர்ச்சை எழுந்தபடியே இருந்தது. ஒரு கட்டத்தில் தலைவர் பதவியிலிருந்து பாக்யராஜையே எடுத்துவிட்டால் என்ன? என்ற பேச்சு முருகதாஸ் தரப்பிலும் எழுந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தை அடுத்துதான் பாக்யராஜ் தனது எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பி விட்டார். அந்த கடிதத்தில் தனது நீண்ட விளக்கத்தையும் தந்திருந்தார். தர்மப்படி செயல்பட்ட பாக்யராஜுக்கே இந்த நிலைமையா என தமிழ் திரையுலகினர் ஆடிப் போய் விட்டார்கள். கொந்தளிக்கவும் செய்தார்கள்.

மன்னிப்பு கேட்கிறோம்
ஆனால் இப்படி பாக்யராஜ் ராஜினாமா செய்வார் என்பதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அச்சங்கத்தினர், உடனடியாக அதற்கு பதிலும் தந்தனர். "எங்கள் இயக்குனரை நாங்கள் விடவே மாட்டோம், பாக்யராஜ்தான் எங்களுக்கு தலைவர்" என்றனர். இது சம்பந்தமாக நம்மிடையே பேசிய சங்க நிர்வாகிகளும், "இயக்குனர் பாக்யராஜிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், யாராவது ஏதாவது தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கூட கேட்கிறோம்" என்று பகிரங்கமாக தெரிவித்தனர்.

குழப்பத்தில் சங்கம்
தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தை 2 நாட்களாக நடைபெற்று கொண்டுதான் இருந்தது. ஆனாலும் பாக்யராஜ் 2-வது முறையாக ராஜினாமாவை அனுப்பியது சங்கத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எப்படியாவது பேச்சுவார்த்தைக்கு பாக்யராஜ் உடன்பட்டு விடுவார் என்று சங்கத்தினர் நினைத்தார்களா என தெரியவில்லை. இப்போது மறு ராஜினாமா என்பதும் செய்வதறியாது குழம்பி உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications