மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 நிறுத்தப்படுகிறதா? தவெக அரசு அமைந்தால் பெண்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் இப்போது ஒரு பெரும் நிர்வாக இழுபறியின் முனையில் நிற்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெக ஆட்சி அமைக்கும் என்ற பேச்சுகள் ஒருபுறம் இருந்தாலும், கோடிக்கணக்கான பெண்கள் நம்பியிருக்கும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வருமா என்பதே இப்போதைய பெரிய கேள்வியாக மாறியுள்ளது.. அப்படியானால் உரிமைத்தொகை என்னாகும்?

தமிழக அரசியல் களம் இப்போது ஒரு பெரும் எதிர்பார்ப்பின் முனையில் நிற்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், 108 இடங்களைப் பிடித்துள்ளதாக யூகிக்கப்படும் தவெக ஆட்சி அமைக்கலாம் என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளன.

Kalaignar scheme Women rights amount TVK Vijay Tamil Nadu politics Welfare scheme debate 1000 scheme Tamil Nadu election TVK government Women aid scheme Political discussion 1000

ஒருவேளை இத்தகைய நிலை ஏற்பட்டு ஆட்சி மாற்றம் நிகழும் பட்சத்தில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள மக்கள் நலத்திட்டங்களின் கதி என்னவாகும்? இதுதான் இப்போது தமிழக வீடுகளில் ஓடிக்கொண்டிருக்கும் பிரதான விவாதமாக உள்ளது.

15-ஆம் தேதி வருமா பணம்

ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வந்துவிட்டால் போதும், தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான பெண்களின் செல்போன்களுக்கு கிரிடிட் மெசேஜ் வந்துவிடும். 8, 10 என தேதிகள் நகர நகர, 15ம் தேதியை நோக்கி எதிர்பார்ப்புகள் எகிறத் தொடங்கும்.

1000 ரூபாய் தானே என்று சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இந்தத் தொகையை வைத்துத்தான் வீட்டுப் பால் கணக்கையோ அல்லது மளிகை பாக்கியையோ முடிக்கும் எத்தனையோ குடும்பங்கள் இங்கே உள்ளன. மே 15 நெருங்கிவிட்ட நிலையில், வங்கி கணக்கை தினமும் செக் செய்யும் பெண்கள் இப்போது ஒருவிதமான தவிப்பில் உள்ளனர்.

ஆட்சி இன்னும் முழுமையாக அமையாத நிலையில், அரசு வட்டாரங்களில் ஓடும் தகவல்படி இந்த மாதம் பணம் விடுவிக்கப்படுவது கொஞ்சம் சிக்கலானதுதான். தவெக தலைவர் விஜய், தனது தேர்தல் வாக்குறுதியில் இந்தத் தொகையை 2500 ரூபாயாக உயர்த்துவதாக சொல்லியிருக்கிறார். பழைய திட்டத்தை அப்படியே தொடர்வார்களா அல்லது முழுமையாக நிறுத்திவிட்டு புது கணக்கு ஆரம்பிப்பார்களா என்பதுதான் இப்போது பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

பெயர் மாறிடுமோ? பணம் நின்றுடுமோ?

அரசியல் வட்டாரங்களில் நிலவும் இப்போதைய சூழலை பார்த்தால், பழைய திட்டத்தின் பெயர் மாற வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. ஆனால், பெயர் மாறினால் கூட பரவாயில்லை, மாதாமாதம் கைக்குக் கிடைக்கும் அந்த உதவித்தொகை மட்டும் நின்றுவிடக்கூடாது என்பதே மாணவிகள் மற்றும் பெற்றோரின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

ஜூன் மாதம் காலேஜ் திறக்கப்போகும் நிலையில், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் வரும் 1000 ரூபாயை நம்பி பல மாணவிகள் அட்மிஷன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை இதில் இழுபறி ஏற்பட்டால், அது நடுத்தரக் குடும்பங்களின் பட்ஜெட்டை நிச்சயம் பதம் பார்க்கும்.

புதிய அரசு - புதிய சேலஞச்

தவெக மெஜாரிட்டிக்கு கிட்ட வந்து ஆட்சி அமைக்கும் பட்சத்தில், தனது தனித்துவத்தை காட்ட சில அதிரடி மாற்றங்களைச் செய்ய விஜய் ஆர்வம் காட்டலாம். பழைய அரசின் குறைகளை சுட்டிக்காட்டி பயனாளிகளின் பட்டியலை சீரமைக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.

குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துவது என்பது நிதி ரீதியாகப் பெரிய சவால். 234 தொகுதிகளிலும் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கும் நிலையில், இந்த நிதிச் சுமையை புதிய அரசு எப்படிக் கையாள போகிறது என்பதற்கான இறுதி முடிவு புதிய அரசு அமைந்த பிறகே தெரிய வரும்.

கோட்டை யாருக்கு என்பதில் நடக்கும் அரசியல் ஒருபுறம் இருந்தாலும், சாமானிய மக்களின் அடுப்பங்கரை பட்ஜெட் பாதிக்கப்படக் கூடாது என்பதே இப்போது ஓடிக்கொண்டிருக்கும் கள எதார்த்தம். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகே இதற்கான தெளிவான முடிவு தெரிய வரும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+