4 பேராசிரியர்கள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை.. செமஸ்டர் தேர்வுக்காக கல்லூரிக்கு சென்ற கலாஷேத்ரா மாணவிகள்
சென்னை: பாலியல் புகாருக்குள்ளான 4 உதவி பேராசிரியர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்ததை அடுத்து இன்று செமஸ்டர் தேர்வுகளை எழுத கல்லூரிக்கு கலாஷேத்ரா மாணவிகள் வருகை தந்துள்ளனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ளது கலாஷேத்ரா பவுண்டேஷன். இங்கு பரத கலையையும் இசையையும் வளர்க்கும் விதமாக 1936 ஆம் ஆண்டு ருக்மிணி தேவி அருண்டேலினால் தொடங்கப்பட்ட ஒரு கல்லூரியாகும்.
இங்கு உலகெங்கும் மாணவிகள் வந்து தங்கி பயில்கிறார்கள். இது பிரம்மஞான சபையின் தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பரதம் பயின்று வருகிறார்கள்.

உதவி பேராசிரியர்கள்
இந்த நிலையில் உதவி பேரசிரியர்களாக ஹரி பத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர். இவர்கள் 4 பேரும் அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தில் கூறிய போதிலும் அவர்கள் யாரும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

கல்லூரிக்கு செல்லாமல் போராட்டம்
இதை கண்டித்து மாணவிகள் கடந்த சில தினங்களாக கல்லூரிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் கல்லூரிக்கு ஏப்ரல் 6 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவிகளிடம் மத்திய, மாநில பெண்கள் ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை நேற்று முன் தினம் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் சமர்ப்பித்தார்.

போராட்டம்
போராட்டத்தை கைவிட்டுவிட்டு கல்லூரிக்குத் திரும்பும்படி நடத்தப்பட்ட பல கட்ட பேச்சுவார்த்தையில் பாலியல் தொல்லை கொடுத்த 4 உதவி பேராசிரியர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை கல்லூரிக்கு திரும்ப மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனிடையே மாணவிகளுக்கு ஏப்ரல் 5 முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கவுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.

4 பேர் டிஸ்மிஸ்
ஆனால் மாணவிகளோ பாலியல் புகாருக்குள்ளான 4 பேர் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் கல்லூரிக்குள் போக முடியாது என தெரிவித்தனர். இதனால் பதற்றம் நிலவியது. இந்த நிலையில் சென்னை மாதவரத்தில் தோழி வீட்டில் பதுங்கியிருந்த பாலியல் புகாருக்குள்ளானவர்களில் ஒருவரான உதவி பேராசிரியர் ஹரி பத்மனை போலீஸார் கைது செய்தனர்.

பேச்சுவார்த்தை
இதையடுத்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது அந்த 4 பேர் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வாய்மொழி அறிவிப்பை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்வதாக அறிவித்தனர். இதையடுத்து பாலியல் புகாருக்குள்ளான 4 உதவி பேராசிரியர்களையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக நேற்றைய தினம் அறிவிப்பை வெளியிட்டது.

கல்லூரிக்கு திரும்பும் மாணவிகள்
இதையடுத்து மாணவிகள் இன்று முதல் கலாஷேத்ரா கல்லூரிக்கு சென்றுள்ளனர். செமஸ்டர் தேர்வுகளை எழுதுகிறார்கள். கடந்த மார்ச் மாதமே செமஸ்டர் தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் போராட்டம் காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. நாளை நடனம் மற்றும் இசைத் துறை மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications