அதிமுகவில் காளியம்மாளுக்கு சீட் இல்லையாம்.. அந்த தொகுதியில் பாமக கோரிக்கை.. வாக்கு கொடுத்த எடப்பாடி!
சென்னை: அதிமுகவில் இணைந்துள்ள காளியம்மாளுக்கு சட்டசபைத் தேர்தலில் சீட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் நாகை தொகுதியில் தங்க. கதிரவன் அதிமுகவுக்காக போட்டியிட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் மயிலாடுதுறை தொகுதியை பாமக எதிர்பார்த்திருக்கிறது. இதனால் தொகுதி கொடுக்க முயற்சிப்பதாக மட்டுமே எடப்பாடி பழனிசாமி உறுதி கொடுத்துள்ளதாக தெரிகிறது.
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், அக்கட்சியில் இருந்து விலகி கடந்த ஓராண்டாக அமைதியாக இருந்தார். தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த காளியம்மாள், தவெகவில் இணைவதாக இருந்தது. ஆனால் தவெகவினர் பெரிதாக ஆர்வம் காட்டாத சூழலில், திடீரென அதிமுகவில் இணைந்திருக்கிறார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி மற்றும் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் காளியம்மாளை அழைத்து வந்துள்ளனர். அதிமுகவில் இணைவதற்கு முன்பாக காளியம்மாள் நாகை தொகுதியை டிமாண்ட்டாக வைத்திருக்கிறார். ஆனால் நாகை தொகுதியில் போட்டியிட கடந்த சில ஆண்டுகளாகவே அதிமுக நிர்வாகி தங்க. கதிரவன் பணியாற்றி வந்திருக்கிறார்.
அதேபோல் கடந்த சட்டசபைத் தேர்தலில் நாகை தொகுதியில் தங்க. கதிரவன் சுமார் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விசிக வேட்பாளர் ஷா நவாஸிடம் தோல்வி அடைந்தார். இம்முறை அதனை ஈடுபட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் காளியம்மாள் நாகை இல்லையென்றால் மயிலாடுதுறை தொகுதியை கேட்டிருக்கிறார்.
ஆனால் மயிலாடுதுறை தொகுதியை பாமக எதிர்பார்த்திருக்கிறது. கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளரிடம் பாமக வேட்பாளர் சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தார். இதனால் மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்படுமா என்பதும் கேள்வி தான். ஆனால் காளியம்மாள் நேரில் சந்தித்த போது, சீட் ஒதுக்க நிச்சயமாக முயற்சிப்போம்.
ஆனால் சட்டசபைத் தேர்தலில் சீட் ஒதுக்க முடியவில்லை என்றால், சோர்ந்துவிட வேண்டும். ஆட்சிக்கு வந்தால், நிச்சயமாக வாரியப் பதவி ஒதுக்கப்படும் என்று உறுதி கொடுத்துள்ளார். மேலும் அதிமுகவில் காளியம்மாளுக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட உள்ளதும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications