நீதி கிடைக்கனும்! ஸ்டாலினை தொடர்ந்து அண்ணாமலையை சந்தித்த கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர்!பின்னணி
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவி மர்மமரணம் அடைந்தார். இந்நிலையில் மாணவியின் தாய் செல்வி முதல் அமைச்சர் ஸ்டாலினை தொடர்ந்து இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை திடீரென்று சந்தித்து மனு அளித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஜூலை 13ம் தேதி இறந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக நடந்த போராட்டம் கலவரமானது. போராட்டக்கார்கள் பள்ளியை சூறையாடி வாகனங்களை சேதப்படுத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் பெற்றோர் கோரியதை தொடர்ந்து மாணவியின் உடல் 2 முறை உடற்கூராய்வு செய்யப்பட்டது.

பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன்
மேலும் மாணவியின் இறப்பு குறித்து சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும் வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை, ஆதாரங்கள் அடிப்படையில் மாணவி கொலை செய்யப்படவில்லை. பலாத்காரம் செய்யப்படவில்லை என்பதை சென்னை உயர்நீதிமன்றம் கூறியது.

அண்ணாமலையுடன் சந்திப்பு
இந்நிலையில் தான் இன்று திடீரென்று மாணவியின் தாய் செல்வி தனது கணவருடன் சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினார். அப்போது மனு ஒன்றை அவர் வழங்கினார். மாணவி இறப்பில் நீதி கிடைக்க உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் மாணவியின் மரணத்தில் உள்ள மர்மங்களை முடிவுக்கு கொண்டு வர உதவி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார். இதற்கு அண்ணாமலையும் உதவி செய்வதாக தெரிவித்துள்ளார்.

முன்பு முதல்வருடன் சந்திப்பு
இதன் தொடர்ச்சியாக மாணவியின் பெற்றோர் சில நாட்களுக்கு முன்பு முதல் அமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மாணவியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதற்கு மாநில அரசு உதவி செய்ய வேண்டும். மாணவியின் மரணம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையில் சுணக்கம் உள்ளது. இந்த விசாரணையை விரைந்து முடிக்கவும் கோரிக்கை வைத்தார். இதனை கேட்ட முதல்வர் குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளித்தார்.

ஸ்டாலின் உறுதி
இந்த சந்திப்பை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ‛‛சமீபத்தில் ஜாமீன் பெற்றுள்ள பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீனை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழியாக மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். எங்கள் கோரிக்கையை கேட்டுக்கொண்ட முதலமைச்சர், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயம் மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்றும் குற்றவாளிகளை நாங்கள் தப்பிக்க விடமாட்டோம் எனவும் உறுதியளித்திருக்கிறார்" என்று மாணவியின் தாய் செல்வி கூறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications