கொரோனா காலத்தில் இலவச இரவு நேரபாடசாலை.. திருத்துறைப்பூண்டி இளைஞர்களுக்கு கமல்ஹாசன் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா லாக்டவுன் காலத்தில் இலவச இரவு நேர பாடசாலை நடத்தி 72 மாணவர்களுக்கு கல்வி கற்பித்த திருத்துறைப்பூண்டி இளைஞர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Kamal Haasan greets Thiruthuraipoondi Two youths for Free Eduction to Stuendts

திருத்துறைப்பூண்டி அய்யூர் இளைஞர்கள் அபினேஷ், கவியரசன் இருவரது முன்முயற்சியால் கொரோனா லாக்டவுன் காலத்தில் இரவு நேர பாடசாலை உருவாக்கப்பட்டது. இந்த பாடசாலையில் 72 மாணவர்கள் இணைந்தனர்.

இந்த 72 பேருக்கும் இலவசமாக கல்வி கற்கப்பட்டது. உள்ளூர் இளைஞர்கள், ஆசிரியைகள் உதவியுடன் இந்த முயற்சியை வெற்றிகரமாக்கினர். இளைஞர்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

எழுத்தறிவிப்பதே பாராட்டுக்குரியது. இந்த இளைஞர்கள் செய்து வரும் பணியோ ஆரத் தழுவிப் போற்றுதற்கேற்றது. ஊரடங்குக் காலத்தில் பள்ளி செல்ல வழியின்றி வாடிய பிள்ளைகளைக் கண்டு வாடிய எம் இளைஞர்கள், எவர் உதவியையும் எதிர்பாராது இலவசக் கற்பித்தலில் இறங்கியிருக்கிறார்கள். சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிறார்கள். வந்தனம். இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+