காற்றடித்தால்.. அரசு வைக்கும் பேனர் கீழே விழாதா.. கார்த்தி சிதம்பரத்திற்கு வந்த சந்தேகம்!
சென்னை: அரசு பேனர் வைத்தால் மட்டும் கீழே விழாதா என்ன என கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் அதிமுக நிர்வாகி வைத்த பேனர் சரிந்து விழுந்ததில் லாரியில் சிக்கி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து பேனர் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அது போல் அரசியல் கட்சிகளும் இனி பேனர் வைக்க மாட்டோம் என சூளுரைத்தன.
இந்த நிலையில் சென்னையில் இந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சந்தித்து பேசவுள்ளனர்.

இடையூறு
இதனால் அவர்களை வரவேற்க பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது. இதையடுத்து அரசு சார்பில் பேனர் வைத்து கொள்ளலாம். அதுவும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் வைக்க வேண்டும்.

சுபஸ்ரீ
ஆனால் கட்சி சார்பில் பேனர் வைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது. பேனர் கீழே விழுந்ததால்தான் சுபஸ்ரீ உயிரிழந்தார். அரசு சார்பில் பேனர் வைத்தால் மட்டும் கீழே விழாதா என கேள்வி எழுப்புகின்றனர்.

விசித்திரம்
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறுகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தந்தை ப.சிதம்பரம், கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டதே இதற்கு உதாரணம். அரசியல் கட்சிகள் பேனர் வைக்கக் கூடாது என தீர்ப்பளித்த நீதிமன்றம், அரசு விழாக்களில் பேனர் வைப்பதற்கு அனுமதி வழங்கியிருப்பது விசித்திரமாக இருக்கிறது.

புனிதர்கள்
காற்றடிக்கும் போது அரசு சார்பில் வைக்கப்பட்ட பேனர் மட்டும் கீழே விழாதா என்ன. பாஜகவை எதிர்ப்பவர்கள், அந்த கட்சியில் சேர்ந்தால் புனிதர்களாகிவிடுவர் என பாஜக நினைக்கிறது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications