காசி தமிழ்ச் சங்கமம்- 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் 'அகத்திய முனிவர்' உடையில் நடைபயணம்!
சென்னை: காசி தமிழ்ச் சங்கமத்தை முன்னிட்டு அகத்திய முனிவர் நடைப்பயணம் சென்னையில் நடைபெற்றது. காசி தமிழ்ச் சங்கமத்தின் (KTS 3.0) 3-வது ஆண்டை முன்னிட்டு, அகத்திய முனிவர் போல உடை அணிந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சென்னையில் நடைபெற்ற நடை பயணத்தில் (வாக்கத்தான்) பங்கேற்றனர்.
இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: காசி தமிழ்ச் சங்கமத்தை முன்னிட்டு அகத்திய முனிவர் நடைப்பயணம் சென்னையில் நடைபெற்றது. காசி தமிழ்ச் சங்கமத்தின் (KTS 3.0) 3-வது ஆண்டை முன்னிட்டு, அகத்திய முனிவர் போல உடை அணிந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சென்னையில் நடைபெற்ற நடைப்பயணத்தில் (வாக்கத்தான்) பங்கேற்றனர்.

மத்திய செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனமும், சாஸ்திர நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த நடைப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தன. சாந்திபனி வித்யாலயா, பிஎஸ் சீனியர், பிஎஸ்பிபி, பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 4 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்திப் பிரச்சார சபாவில் தொடங்கி தி. நகரில் உள்ள அகத்திய முனிவர் ஆசிரம கோவிலில் முடிவடைந்த இந்த நடைப்பயணத்தில் அவர்கள் பங்கேற்றனர். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அகத்தியர் குறித்த அமர் சித்ரா கதா வெளியீட்டு நூல் பிரதி வழங்கப்பட்டது. மேலும் தரிசனத்திற்குப் பிறகு பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
காசி தமிழ்ச் சங்கமத்தின் 3-ம் ஆண்டின் (கேடிஎஸ் 3.0) கருப்பொருள் அகத்திய முனிவர் தொடர்பானதாகும். அகத்தியர் ஒரு தேசிய ஒருங்கிணைப்பாளர் என்ற பொருளில் இந்த மாணவர்கள், ஆசிரியர்கள், அமைப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
சாஸ்திரா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ் வைத்ய சுப்ரமணியன், சாஸ்திராவின் சென்னை இயக்குநர் டாக்டர் சுதா சேஷையன், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோரும் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றனர். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications