தண்டவாளத்தில் கழற்றப்பட்ட "9 நட்டுகள்.." கவரப்பேட்டை ரயில் விபத்தில் திடுக்கிடும் தகவல்!
சென்னை: கவரப்பேட்டை ரயில் விபத்து பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தண்டவாளத்தில் நட்டுகள் கழற்றப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. பொன்னேரியில் 6 நட்டுகளும், கவரப்பேட்டையில் 3 நட்டுகளும் தண்டவாளத்தில் கழற்றப்பட்டு இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மைசூரில் இருந்து புறப்பட்டு பெங்களூர் வழியாக ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை சென்டிரல் வழியாக தர்பங்கா நோக்கி செல்லும். கடந்த 11 ஆம் தேதி வழக்கம் போல பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்ற போது, சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.

மெயின் வழியில் செல்ல வேண்டிய பாகுமதி எக்ஸ்பிரஸ் லூப் லைனில் சென்றதே இந்த விபத்துக்கு காரணமாக இருந்தது. இந்த விபத்தில், 19 பயணிகள் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. அண்மைக் காலமாகவே ரயில் விபத்து சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பயணிகள் மத்தியில் அதிரச்சியை ஏற்படுத்தியது.
ரயில் விபத்துக்கு நாச வேலை காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால், தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. அதில், விபத்து நடந்த இடத்தில் இருந்த 'சுவிட்ச் பாயிண்ட்' போல்டு மற்றும் நட்டுகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. ரயில்வே போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், நட்டு போல்ட்டுகள் கழற்றப்பட்டதே விபத்திற்கு காரணம் என்ற திடுக்கிடும் தகவல் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரயில் நிலைய மேலாளர், சிக்னல் ஊழியர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் உள்ளிட்ட 15 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் தண்டவாளத்தில் நட்டு, போல்ட்டுகள் கழற்றப்பட்டதும், குறிப்பாக கவரப்பேட்டையில் 3 நட்டுகளும், பொன்னேரியில் 6 நட்டுகளும் கழற்றப்பட்டது தெரியவந்துள்ளது.
நட்டுகள் கழற்றப்பட்டதால் இரண்டு தண்டவாளங்களை மாற்றுவதில் சிக்கல் இருந்ததாகவும், இதனால் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது. விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
இனி கடைசி நேரத்தில் டிக்கெட் கேன்சல் செய்தால் நோ ரீஃபண்ட்.. ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம் -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்











Click it and Unblock the Notifications