"அறிந்தே செய்யும் அநீதி.. மத்திய அரசு மாண்பு தவறிவிட்டது!" பட்ஜெட் பற்றி கவிஞர் வைரமுத்து விமர்சனம்
சென்னை: கடந்த வாரம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகப் பலரும் சாடி வரும் நிலையில், இது தொடர்பாகக் கவிஞர் வைரமுத்து விமர்சித்துள்ளார். மத்திய அரசு மாண்பு தவறிவிட்டதாக விமர்சித்துள்ள அவர், திருக்குறளைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இருப்பினும், இந்தப் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு திட்டமும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

அதேபோல வழக்கமாக மத்திய பட்ஜெட்டில் எப்போதும் ஒரு திருக்குறள் இடம்பெற்று இருக்கும். ஆனால், இந்த முறை திருக்குறள் எதுவும் இல்லை. இதையும் பலரும் குறிப்பிட்டு விமர்சித்து வருகிறார்கள். இதற்கிடையே இப்போது இதைக் கவிஞர் வைரமுத்து விமர்சித்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தில் துப்பாக்கியுடன் வைரமுத்து! கவிதை போர் வெடிக்கட்டும்! நெட்டிசன்கள் கருத்து
விமர்சனம்: இது தொடர்பாகக் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில், "ஒன்றிய அரசின்
நிதிநிலை அறிக்கையில்
உரிமையும் நியாயமும்
தேவையும் உள்ள தமிழ்நாடு
போகிற போக்கில்
புறக்கணிக்கப்பட்டிருக்கிறது
இது
அறிந்தே செய்யும் அநீதி
தனக்கு எதிராகக்
குடைபிடித்தவனுக்கும்
சேர்த்தே பொழிவதுதான்
மழையின் மாண்பு
மழை
மாண்பு தவறிவிட்டது
நிதிநிலை அறிக்கையில்
குறள் ஒன்று கூறுவது
எழுதாத மரபு.
இவ்வாண்டு விடுபட்டுள்ளது
எழுத வேண்டிய குறள்
என்ன தெரியுமா?
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”
என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அர்த்தம் என்ன: அதாவது இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை என்பதே இந்த குறளின் பொருளாகும். அவரது ட்வீட் இப்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications