Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிய மலையாள நடிகை.. கதவை தட்டிய ரூம் பாய்! பரபரத்த தி.நகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தி நகரில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த 20 வயது இளம் நடிகையிடம் ஓட்டல் ஊழியரே அத்துமீற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தங்கியிருந்த அறையில் இண்டர்காம் வேலை செய்யாததால் அதை சரி செய்வதற்காக வந்த ஓட்டல் ஊழியர் திடீரென நடிகையை நெருங்கி கட்டிப்பிடிக்க முயன்றதால், பயந்து போன நடிகை போலீசிடம் போன் செய்துள்ளார்.

இதன் பேரில் ஹோட்டலுக்கு வந்த போலீசார் நடிகையை கட்டிப்பிடிக்க முயன்ற ஊழியரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

Kerala Actress

ரூம் எடுத்து தங்கிய கேரள நடிகை

சென்னை தி நகர் தாமஸ் சாலையில் இருக்கும் தனியார் ஓட்டல் ஒன்றிற்கு கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த 26 வயது இளம் நடிகை ஒருவர் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது அவர் உணவு ஆர்டர் செய்வதற்காக தனது அறையில் இருந்த இண்டர்காம் போன் மூலம் வரவேற்பு அறையை தொடர்பு கொண்டார்.

ஆனால் போன் ஒர்க் ஆகவில்லை. இதனால் கீழே வரவேற்பு அறைக்கு சென்ற அவர் இண்டர்காம் ஒர்க் ஆகாதது குறித்து கூறினார். இதையடுத்து ஓட்டல் நிர்வாகத்தினர் அங்கு ஊழியராக பணிபுரிந்து வந்த கல்லூரி மாணவர் ஒருவரை நடிகையின் ரூமுக்கு அனுப்பியுள்ளனர். சென்னை ஆலந்தூரை சேர்ந்த 20 வயது இளைஞரான ஊழியர் கல்லூரியில் படித்து வருகிறார்.

நெருங்கி வந்து கட்டிப்பிடிக்க முயற்சி

கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வருகிறாராம். நடிகை தங்கியிருந்த ரூமிற்கு வந்த அவர் இண்டர்காமை சரி செய்துள்ளார். பிறகு அங்கிருந்து செல்லாமல் திடீரென நடிகையை நெருங்கி சென்று கட்டிப்பிடிக்க முயன்றுள்ளார். இதனால் நடிகை அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் கல்லூரி மாணவரை பிடித்து எச்சரித்து இருக்கிறார்.

ஆனாலும் அந்த வாலிபர் நீங்கள் நடிகை தானே? உங்களை ஒரே ஒரு முறை நான் கட்டிப் பிடித்துக் கொள்கிறேன் என்று மாறி மாறி கேட்டு தொல்லை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன நடிகை உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை

இதன்பேரில் அங்கு வந்த பாண்டி பஜார் போலீசார் கல்லூரி மாணவரை பிடித்து விசாரித்தனர். அப்போது நான் அப்படி செய்யவே இல்லை என கல்லூரி மாணவர் மறுத்து இருக்கிறார். இதையடுத்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். நடிகையையும் புகார் கொடுப்பதற்காக காவல் நிலையம் சென்றார்.

அப்போது அந்த இளைஞர், "நடிகை தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு நான் சென்றது உண்மைதான். அறையில் இருந்த இண்டர்காம் போனை சரி செய்தேன். பிறகு உணவு ஆர்டர் எடுத்துக் கொண்டு விட்டு கீழே வந்து விட்டேன்" என கூறியுள்ளார். தொடர்ந்து கேரள நடிகையும் அந்த இளைஞர் மீது எழுத்துப் பூர்வமாக புகார் எதுவும் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து நாங்கள் அழைக்கும் போது விசாரணைக்கு வர வேண்டும் என கல்லூரி மாணவரிடம் கூறிய போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஹோட்டலில் தங்கியிருந்த நடிகையிடம் ஓட்டல் ஊழியரே அத்துமீற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+