சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி.. கொலீஜியம் பரிந்துரை!
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீவஸ்தவா வரும் மார்ச் 5 ஆம் தேதி பணி ஓய்வு பெறுவதை அடுத்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய பிரதேச உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2018 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவரை தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி 1966 ஆம் ஆண்டு ராய்பூரில் பிறந்தவர். சிவில், கிரிமினல் மற்றும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளில் பயிற்சி பெற்றவர். 1992 ஆம் ஆண்டு ஜபல்பூரில் உள்ள மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒய்.எஸ். தர்மாதிகாரிக்கு ஜூனியராக பணியாற்றினார். 2000 முதல் 2015 வரை அரசின் நிலை ஆலோசகராக, வருமான வரித் துறை, இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய கலால் வரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், பிஎஸ்என்எல், போபால் எரிவாயு உள்ளிட்ட வழக்குகளில் பணியாற்றினார்.
ஜபல்பூரில் உள்ள மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் 24 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் தர்மாதிகாரி. 2016ல் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், மார்ச் 17, 2018 அன்று நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவரை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
அதேபோல பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியான நீதிபதி லிசா கில்லை ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications