கேரளாவை அசத்திய மொய் விருந்து.. சட்டையில் அதென்ன QR கோடு? இணையம் முழுக்க கலக்கும் ஹைடெக் கல்யாணம்
சென்னை: சமீப காலமாகவே அனைத்திலும் புதுமை புகுந்துவிட்டது.. உணவு, உடை, இருப்பிடம், தொழில், பொருட்கள் என அத்தனையிலும் புதுமையின் வருகை அதிகரித்தபடியே உள்ளது.. அந்தவகையில், திருமண நிகழ்வுகளிலும் புதுமைக்கு பஞ்சம் இருப்பதில்லை.. திருமண அழைப்பிதழ் அச்சடிப்பதிலும், ஆடைகளை வடிவமைப்பதிலும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமைகளை புகுத்தி வருகின்றனர். அதில் கேரளாவில் நடந்துள்ள புதுமை பலரையும் அசரடித்து வருகிறது.
நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் சுபகாரியங்களில் மொய் எழுதுவது என்பது காலம் காலமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது.

இதற்கு காரணம், சுபநிகழ்ச்சியை நடத்துபவரின் நிதித் தேவைக்கு உதவும் ஈகை மட்டுமே கிடையாது.. வட்டியில்லா முதலீடு மட்டுமே கிடையாது.. அனைத்தையும் தாண்டி, அன்பளிப்புடன் உறவுகளுக்குள் பகிரும் அன்பின் அடையாளமாகும்.
சுப நிகழ்ச்சிகளில் மொய்ப்பணம்
அந்தவகையில் திருமண வீடுகளில் வைக்கப்படும் மொய் விருந்தானது, ஒருவரின் வாழ்க்கையின் துவக்கத்துக்கு அடித்தளமாகிறது..
அந்தவகையில் ஆரம்பத்தில் நூறு, ஆயிரம் என துவங்கி லட்சங்களில் மொய் விருந்துகள் வசூலாகும் நிலைமை இன்று வந்துவிட்டது. முன்பெல்லாம் மொய் எழுதுவதற்கென்றே நெருங்கிய உறவுகளை திருமண வீடுகளில் உட்கார வைத்துவிடுவார்கள். வசூலான மொய் பணத்தை எண்ணி அவரே திருமண வீட்டாரிடம் ஒப்படைத்துவிடுவார்.
ஆனால், இப்போது லட்சக்கணக்கில் மொய் கொட்ட துவங்கிவிட்டது.. விருந்துக்கு வரும் பெரும்பாலானோர் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக மொய் எழுதுவதால் பணத்தை எண்ணுவது சிரமமாக இருந்து வந்தது. எனவே, மொய் எழுதுவதற்கு உறவினர்கள் தவிர்த்து 50க்கும் மேற்பட்ட ஆட்களை சம்பளத்திற்கு பிடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட துவங்கிவிட்டது.. இது மொய் விருந்தை வைப்பவர்களுக்கு பெரிய தலைவலியாக உள்ளது..
மொய் விருந்து மிஷின்
எனவே, வங்கிகள் பயன்படுத்தும் பணம் எண்ணும் மெஷினை, மொய் எழுதுவதற்கும் பயன்படுத்த துவங்கிவிட்டார்கள்.. இந்த கணினி முறையில் மொய் எழுதும்போது மொய் எழுதியவருக்கு ரசீதும், செல்போனில் மெசேஜூம் வந்துவிடுகிறது..
மொய் விருந்துக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டதுதான், "மொய் டெக்" செயலி. சுபநிகழ்வுக்கு செல்ல முடியாதவர்கள், இந்த ஆப் மூலம் மொய் விபரங்களை ஆண்ட்ராய்டு செல்போனில் பார்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. மொய் யாருக்கெல்லாம் செய்துள்ளோம் என்பதையும் இந்த செயலி மூலம் சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
மொய் வசூலிப்பில் புதுமை
மொய் பணத்தை செலுத்துவதிலும், மொய் பணத்தை எண்ணுவதற்காகவும் புது புது வசதிகள் தற்போது வந்துள்ளது, பொதுமக்களுக்கும் எளிதாகவும், வசதியாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் ஒரு விசேஷமான சம்பவம் நடந்துள்ளது.. அங்கு நடந்துள்ள ஒரு திருமண விழாவில், வழக்கம்போல் மொய் விருந்து நடந்துள்ளது.. விழாவில் மொய் செய்வதற்காக பலரும் வரிசையில் காத்து கொண்டிருந்திருக்கிறார்கள்..
விருந்தில் கியூ ஆர் கோடு
அப்போது, விருந்தில் கியூ ஆர் கோடு மூலம் பணம் வசூலிக்கப்பட்டதை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர்.. மணமக்களின் உறவினர் ஒருவர் ஆன்லைன் பணபரிவர்த்தனைக்கான கியூ ஆர் கோடு பொறித்த அட்டையை தன்னுடைய சட்டை பையில் ஒட்டியிருந்தாராம்..
திருமணத்திற்கு வந்த உறவினர்கள், அந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்து தங்களது மொய்ப்பணத்தை செலுத்தியிருக்கிறார்கள்.. இதை திருமணத்தில் பங்கேற்றவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டார்கள்.. கல்யாண வீட்டிலும் கியூ ஆர் கோடு? இன்னும் என்னவெல்லாம் புதுமை வரப்போகிறதோ? என்று இணையவாசிகள் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications