மது போதையில் கேரள பெண்.. அத்துமீற முயன்ற ஸ்டார் ஹோட்டல் ஊழியர்.. சென்னையில் பரபரப்பு

கேரள பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டார் ஓட்டல் ரூமில் போதையில் இருந்த கேரள இளம்பெண்ணை கட்டிலில் தள்ளி பாலியல் தொல்லை தந்த ஓட்டல் ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு வயது 29. ஆன்லைன் மார்க்கெட்டிங் செய்து வருகிறார்.

kerala young woman molested by hotel employee in chennai

ஆபீஸ் விஷயமாக போன 22ம் தேதி சென்னை வந்திருந்தார் ராதா. ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் ரூம் எடுத்து தங்கினார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு, ரூமுக்கு வந்த ராதா மது அருந்தி உள்ளார். அந்த நேரத்தில் ரூம் சர்வீஸ் ஊழியரை ரூமுக்கு வரழைத்து, அறையை சுத்தப்படுத்தும் வேலையை தந்துள்ளார்.

அவரும் வேலையை செய்து முடித்துவிட்டு, கிளம்பும்போது அந்த ரூமின் ஜன்னல் கதவுகளை மூடினார். பின்னர் போதையில் இருந்த ராதாவை அங்கிருந்த கட்டிலில் தள்ளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ராதா, சத்தம் போட்டு அலறினார்.

உடனே மற்ற அறையில் தங்கியிருந்தவர்கள், ஓட்டல் ஊழியர்கள் ஓடிவந்தனர் அங்கே அத்துமீறலில் ஈடுபட்ட ரூம் சர்வீஸ் ஊழியரை இழுத்து பிடித்து, ராதாவை மீட்டனர். உடனே ராதா, தேனாம்பேட்டை மகளிர் போலீசில் புகார் செய்யவும், போலீசார் விரைந்து வந்து, ஓட்டல் ஊழியரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

பெயர் மாணிக்கம், வயசு 32 என்றும், திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து அந்த ஓட்டல் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+