பெண்கள் என்ன பலாத்காரம் செய்யும் பொருளா? என்ன பேச்சு இது? மன்சூர் அலிகானுக்கு குஷ்பு கண்டனம்
சென்னை: பெண்கள் என்ன பலாத்காரம் செய்யும் பொருளா என மன்சூர் அலிகான் விவகாரத்தில் குஷ்பு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மன்சூர் அலிகானை போல் பல பேர் கீழ்த்தரமான வேலைகளை செய்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களை பற்றி எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என நினைக்கிறார்கள்.

பெண்களை அவதூறாக பேசினால் கேட்க யாரும் இல்லை. அப்படியே கேட்டாலும் 2 நாளில் மறந்துவிடுவார்கள் என நினைத்து வார்த்தைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். மன்சூர் அலிகான் சொல்றாரு, "நான் த்ரிஷாவை பேசுவதற்கு முன்பும் பின்பும் என்ன பேசியிருக்கிறேன் என பாருங்கள்" என கூறியுள்ளார்.
ஆனால் அவர் முன்னேயும் பின்னேயும் என்ன பேசியிருக்கிறார் என்பது குறித்தெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. சொன்ன வார்த்தைகள் மிகவும் தவறான வார்த்தைகள். பெண்ணை மதிக்கும் மனிதர்கள் நிச்சயமாக இது மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார்கள். பெண்களை பார்த்தால் உங்களுக்கு என்ன ரேப் செய்யும் பொருளா தெரியுதா?
அவருடைய பேச்சு அப்படித்தான் இருக்கிறது. எனவே தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும் நான் இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டு போகாவிட்டால் எனக்குத்தான் கேவலமாக இருக்கும். பெண்களையும் அவர்களுடைய சுயமரியாதையையும் பாதுகாக்கவே நான் மகளிர் ஆணையத்தில் பதவியில் இருக்கிறேன். த்ரிஷா என்றில்லை, யாரை பற்றி பேசினாலும் நான் நடவடிக்கை எடுப்பேன்.
அவர் மீது 509 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். போலீஸார் அவரை விசாரணைக்கு அழைப்பார்கள். அதன் பிறகுதான் என்ன நடக்கும், இந்த வழக்கு எந்த திசையில் செல்லும் என்பதை எல்லாம் சொல்ல முடியும். பெண்களின் பாதுகாப்புக்காகவே தேசிய மகளிர் ஆணையம் பணியாற்றி வருகிறது என குஷ்பு தெரிவித்தார்.
நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
லியோ படத்தில் த்ரிஷா நடித்திருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் மன்சூர் அலிகான் நடித்தார். அதில் விஜய் குறித்து பிளாஷ்பேக் சொல்லும் காட்சி அவருக்கு கொடுக்கப்பட்டது. சில நிமிடங்கள் மட்டுமே அவர் நடித்திருந்தார்.
ஆனால் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்து மிகவும் மோசமான வகையில் பேசியிருந்தார் மன்சூர் அலிகான். இது குறித்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மன்சூர் அலிகான் என்னைப்பற்றி மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான முறையில் பேசும் வீடியோ குறித்து நான் கேள்விப்பட்டேன். அவரை போன்றவருடன் இனிமேல் ஒருபோதும் திரைப்படங்களில் நடிக்கமாட்டேன்.
மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்திருந்தார். நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications