நல்ல சூழ்நிலையில் வளர்ந்தவர்களா?..கொந்தளித்த குஷ்பு.. சாதிக் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்
சென்னை: பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியதாக திமுகவின் சைதை சாதிக் மீது டெல்லி தேசிய மகளிர் ஆணையத்தில் பாஜக நிர்வாகி குஷ்பு புகார் அளித்துள்ளார். நல்ல சூழ்நிலையில் வளர்ந்த யாரும் பெண்களைப் பற்றி இப்படி தவறாக பேசமாட்டார்கள் என்றும் அதைக் கேட்டு சிரிக்க மாட்டார்கள் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் மேற்கு பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் பாஜக பெண் நிர்வாகிகள் பற்றி அவதூறாக பேசினார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் சைதை சாதிக்கை பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்துநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன், நிர்வாகி கோமதி கணேசன் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.இவர் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்க இருப்பதாக குஷ்பு கூறினார்.

குஷ்பு புகார்
அதன்படி திமுக நிர்வாகி சைதை சாதிக் அவதூறாக பேசியது பற்றி டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பு புகார் அளித்துள்ளார். சாதிக் மீது தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மாவை சந்தித்து புகார் அளித்தார்.

நல்ல சூழ்நிலையில் வளர்ந்தவர்கள்
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, நல்ல குடும்பத்தில் பிறந்த ஆண்கள் ஒரு போதும் பொது மேடையில் பெண்களைப் பற்றி அசிங்கமாக பேச மாட்டார்கள். அதே போல அதைக் கேட்டு ரசிக்கவும் மாட்டார்கள். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் உறுதி அளித்ததாகவும் கூறினார் குஷ்பு.

சாதிக் மீது வழக்குப்பதிவு
இதனிடையே திமுக நிர்வாகி சாதிக் மீது பாஜக மகளிர் அணி சார்பில் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் குறித்து தரக்குறைவாக பேசுதல், பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பயந்து ஒதுங்க மாட்டேன்
இந்த பிரச்சினையில் நான் பயந்து ஒதுங்கி விடவும் மாட்டேன். விட்டு விடவும் மாட்டேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையில் தூங்கி விழிக்கும்போது பயந்து கொண்டே எழுவதாகவும், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் யார் என்ன பிரச்சினையை இழுத்து வைத்து உள்ளார்களோ? என்று நினைத்து கொண்டு தூக்கமின்றி தவிப்பதாக கூறியிருந்தார். இப்போது அவர் நினைத்தது போலவே அவரது கட்சிக்காரர் ஒருவர் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து இருக்கிறார். நாகரீகமே இல்லாமல் பேசிய அவர் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார். இதுவரை ஏன் அவரை கட்சியை விட்டு நீக்கவில்லை? என்றும் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். சைதை சாதிக்கின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
-
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்?












Click it and Unblock the Notifications