நல்ல சூழ்நிலையில் வளர்ந்தவர்களா?..கொந்தளித்த குஷ்பு.. சாதிக் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்
சென்னை: பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியதாக திமுகவின் சைதை சாதிக் மீது டெல்லி தேசிய மகளிர் ஆணையத்தில் பாஜக நிர்வாகி குஷ்பு புகார் அளித்துள்ளார். நல்ல சூழ்நிலையில் வளர்ந்த யாரும் பெண்களைப் பற்றி இப்படி தவறாக பேசமாட்டார்கள் என்றும் அதைக் கேட்டு சிரிக்க மாட்டார்கள் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் மேற்கு பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் பாஜக பெண் நிர்வாகிகள் பற்றி அவதூறாக பேசினார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் சைதை சாதிக்கை பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்துநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன், நிர்வாகி கோமதி கணேசன் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.இவர் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்க இருப்பதாக குஷ்பு கூறினார்.

குஷ்பு புகார்
அதன்படி திமுக நிர்வாகி சைதை சாதிக் அவதூறாக பேசியது பற்றி டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பு புகார் அளித்துள்ளார். சாதிக் மீது தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மாவை சந்தித்து புகார் அளித்தார்.

நல்ல சூழ்நிலையில் வளர்ந்தவர்கள்
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, நல்ல குடும்பத்தில் பிறந்த ஆண்கள் ஒரு போதும் பொது மேடையில் பெண்களைப் பற்றி அசிங்கமாக பேச மாட்டார்கள். அதே போல அதைக் கேட்டு ரசிக்கவும் மாட்டார்கள். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் உறுதி அளித்ததாகவும் கூறினார் குஷ்பு.

சாதிக் மீது வழக்குப்பதிவு
இதனிடையே திமுக நிர்வாகி சாதிக் மீது பாஜக மகளிர் அணி சார்பில் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் குறித்து தரக்குறைவாக பேசுதல், பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பயந்து ஒதுங்க மாட்டேன்
இந்த பிரச்சினையில் நான் பயந்து ஒதுங்கி விடவும் மாட்டேன். விட்டு விடவும் மாட்டேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையில் தூங்கி விழிக்கும்போது பயந்து கொண்டே எழுவதாகவும், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் யார் என்ன பிரச்சினையை இழுத்து வைத்து உள்ளார்களோ? என்று நினைத்து கொண்டு தூக்கமின்றி தவிப்பதாக கூறியிருந்தார். இப்போது அவர் நினைத்தது போலவே அவரது கட்சிக்காரர் ஒருவர் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து இருக்கிறார். நாகரீகமே இல்லாமல் பேசிய அவர் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார். இதுவரை ஏன் அவரை கட்சியை விட்டு நீக்கவில்லை? என்றும் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். சைதை சாதிக்கின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
-
கோவையின் அஸ்திவாரத்திலேயே கை வைத்த செந்தில் பாலாஜி.. மொத்தமாக மாறும் களம் -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
DVAC தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் மிட்டல் பாஜக ஆதரவாளர்.. தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
செந்தில் பாலாஜின்னா தனி ரகம்! 200000 ஓட்டுக்காக வேலுமணி தந்த ஸ்டார் ஓட்டல் ட்ரீட்.. உடனே ட்விஸ்ட் -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக











Click it and Unblock the Notifications