Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சந்திரனுக்கு 27 மனைவி, நிலவை பாம்பு விழுங்கும் மூடநம்பிக்கை ஒழியட்டும் - டைமிங்கில் அடித்த கி வீரமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெற்றதை பாராட்டி உள்ள திராவிடர் கழக தலைவர் கி வீரமணி, சந்திரனுக்கு 27 மனைவிகள் என்ற கட்டுக்கதையும், சந்திரனைப் பாம்பு விழுங்குகிறது என்பன போன்ற மூடநம்பிக்கைகளும் ஒழியட்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "சந்திராயனின் வெற்றி மனித அறிவுக்கும் ஆற்றலுக்கும், அறிவியலுக்கும் ஒரு சான்று. இனியாவது சந்திரனுக்கு 27 மனைவிகள் என்ற கட்டுக்கதையும், சந்திரனைப் பாம்பு விழுங்குகிறது என்பன போன்ற மூடநம்பிக்கைகளும் ஒழியட்டும்.

Ki Veeramani tweet on the myth of moon having 27 wives and moon being eaten by a snake

நிலவில் கால் வைத்த நாம், நிலவைத் தாண்டியும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் விண்கலன்கள் இனி செவ்வாய் தோஷ மூடநம்பிக்கையையும் முறியடிக்கட்டும். சந்திராயன் வெற்றிக்கு உழைத்த அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும், குறிப்பாக திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் அவர்களுக்கும் நம் வாழ்த்துகள், பாராட்டுகள்!" என்று குறிப்பிட்டு உள்ளார்.

சந்திரயா 3 திட்டத்தின் வெற்றியின் மூலமாக நிலவிற்கு விண்கலம் அனுப்பிய ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் வரிசையில் புதிதாக 4 வது நாடாக இந்தியா இணைந்துள்ளது. சந்திரயான் 1 விண்கலத்தை கடந்த 2008 ஆம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவிற்கு அனுப்பினார்கள்.

அது வெற்றிபெறாத நிலையில் 2 வது முறையாக 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 விண்கலத்தை நிலவுக்கு இஸ்ரோ அனுப்பியது. ஆனால், ரோவர் கருவி நிலவின் மேற்பரப்பில் வேகமாக மோதி வெடித்து சிதறியது. அதை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது.

நிலவின் இருண்ட பகுதியை ஆய்வு செய்வதற்காக ஆந்திரவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் செலுத்தப்பட்டது. நிலவின் தெற்கு பகுதியில் விண்கலத்தை நிலை நிறுத்தும் வகையில் சந்திரயான் 3 இஸ்ரோ அனுப்பியது.

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட விண்கலம் பூமியின் நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்தது. பின்னர் நிலவின் ஆர்ப்பிட்டுக்குள் நுழைந்த சந்திரயான் 3, நீள் வட்டப்பாதையில் பல நாட்கள் சுற்றியது. இந்த நிலையில் இன்று மாலை சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி இருக்கிறது. நிலாவை தொட்டவுடன் விக்ரம் லேண்டர், "இந்தியா.. நான் எனது இலக்கை எட்டிவிட்டேன். நீங்களும்தான்." என இஸ்ரோவுக்கு மெசேஜ் அனுப்பியது

இஸ்ரோவுக்கு விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பகுதியில் இருந்து எடுத்த புகைப்படங்களை அனுப்பியது. "விக்ரம் லேண்டர் - பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தின் இணைப்பு வெற்றிகரமாக நடந்துள்ளது." என்று ட்விட்டரில் இஸ்ரோ பதிவிட்டு உள்ளது. விக்ரம் லேண்டர் மீது படிந்து இருந்த நிலவின் மணல் தூசு விலகியதை அடுத்து பிரக்யான் ரோவரில் இருந்து வெளி வந்தது லேண்டரின் படத்தையும் அனுப்பியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+