கூவத்தூர்.. நடிகைகள்.. உல்லாசம்.. எவ்ளோ அசிங்கப்படுத்திட்டாரு இந்த ராஜு.. போலீசில் கருணாஸ் புகார்
சென்னை: கூவத்தூர் விவகாரம் குறித்து பேசி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு பரபரப்பை கிளப்பி உள்ளார். இந்நிலையில் தான் நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் சார்பில் ஏவி ராஜு சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். இவரது சொந்த மாவடத்தை சேர்ந்தவர் ஏவி ராஜு. இவர் சேலம் ஒன்றிய அதிமுக செயலாளராக பொறுப்பில் இருந்து வந்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஏவி ராஜு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கினார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாதல் ஏவி ராஜு கடும் கோபமடைந்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவை அவர் விமர்சனம் செய்ய தொடங்கினார். இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பியது. அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அடுத்த முதல்வர் யார்? என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்த வேளையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இப்படி அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டபோது அங்கு என்ன நடந்தது? என்பது பற்றி ஏவி ராஜு கூறியது தான் சர்ச்சையை கிளப்பியது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏ வெங்கடாசலம் கூவத்தூரில் என்ன கூத்து அடித்தனர் என்பது தெரியும். ஒரு பிரபல நடிகையின் பெயரை கூறி அவரை வெங்கடாசலம் கேட்டார். ரூ.25 லட்சம் கொடுத்து நடிகை வரவழைக்கப்பட்டார். எங்களுடன் நடிகர் கருணாஸ் இருந்தார். அவர் தான் நடிகையை ஏற்பாடு செய்து கொடுத்தார் என்றார்.
இதில் ஒரு நடிகையின் பெயரை ஏவி ராஜு கூறிய நிலையில் பெயரை குறிப்பிடாமல் நடிகைகள் சொகுசு விடுதிக்கு வந்து சென்றதாகவும், அதற்கான செலவை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்து பரபரப்பை கிளப்பினார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து திரையுலகினர் உள்பட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் ஏவி ராஜுவின் பேச்சை கண்டித்தனர்.
இந்நிலையில் தான் முன்னாள் எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவன தலைவருமான கருணாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்தது தொடர்பாக அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு அவதூறு பரப்புகிறார். எனது பெயரை கெடுக்கும் நோக்கத்தில் ஆதாரமற்ற புகார்களை ஏவி ராஜு கூறியுள்ளார். குறிப்பிட்ட நடிகை பற்றியும், தன்னை பற்றியும் அவதூறான கருத்துகளை அவர் கூறியிருக்கிறார்.
இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். ஆதாமற்ற வகையில் அவதூறான குற்றச்சாட்டுகளை கூறிய ஏவி ராஜு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பேட்டியை வெளியிட்ட யூடியூப் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து ஏவி ராஜு பேசிய வீடியோவை பார்வையிட்டு சைபர் க்ரைம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனால் விரைவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஏவி ராஜு கைது செய்யப்பட உள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
4300 கோடி சொத்து இருந்தும் லீமா ரோஸ் அடித்த பல்டி? எடப்பாடி பழனிசாமி கணக்கை மாற்றிய ரிவர்ஸ் உத்தி -
கரூரில் நெய்வேலி ரூட்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்ஸ்டா பேஜை பார்த்தீங்களா? புதுசா இருக்கே! "மாஸ்டர்.."! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம்












Click it and Unblock the Notifications