பின்டெக் சிட்டி டெண்டர்.. திமுக அரசை சாடிய தமிழக பாஜக.. அதிமுக குறித்து சொன்னது தான் ஹைலைட்
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில் நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை பிஎஸ்டி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்றும் கடந்த காலத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறு என்று தி மு க அரசு ஏற்று கொள்கிறதா? என்றும் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை புளியந்தோப்பில் கேபி பார்க் குடியிருப்புகளை தரமற்றதாக கட்டிய பிஎஸ்டி நிறுவனத்திற்கு இனி அரசு பணிகள் டெண்டர் வழங்கப்படாது என்று தமிழக அரசு முடிவெடுத்து இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு முன்பு கூறியிருந்ததாக தெரிவித்துள்ள அறப்போர் இயக்கம், தரமற்ற கட்டிடங்கள் கட்டும் நிறுவனத்திற்கு கட்டுமான டெண்டர் கொடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் அதிமுக ஆட்சியில் கேபி பார்க் கட்டிடத்தை கட்டி ஊழல் செய்த பிஎஸ்டி எம்பைர் நிறுவனம் தான் தற்பொழுது திமுக ஆட்சியில் பல கோடி மதிப்பில் பின்டெக் சிட்டி கட்டிடத்தை கட்ட இருக்கிறார்கள் என்றும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, திமுக அரசுக்கு கேள்வி எழுப்பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் நாராயணன் திருப்பதி கூறியுள்ளதாவது: "கடந்த 2021ம் ஆண்டு சென்னை புளியந்தோப்பில் கே.பி. பார்க் என்ற இடத்தில் 251 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டியதில் ஒரு மூட்டை சிமெண்டுக்கு 15 மூட்டை மணல் என்ற விகிதத்தில் கலந்து மிக பெரும் ஊழலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்ததோடு, கையாலேயே வீடுகளை உடைத்துவிடும் அளவிற்கு தரக்குறைவான கட்டுமானத்தை உருவாக்கி, மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் நாமக்கல், திருவள்ளூரில் கட்டிய அரசு மருத்துவமனைகள் தரமில்லாமல் கட்டப்பட்டதாக சொல்லப்படுவதோடு, விழுப்புரம், தளவானூரில் கட்டிய தடுப்பணை சில நாட்களிலேயே உடைந்து போனதையோ, அந்த நேரத்தில் இன்றைய அமைச்சர் பொன்முடி அவர்கள் சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தியதையோ யாராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.

தரக்குறைவான கட்டுமானத்திற்கு அந்த நிறுவனமே காரணம் என்று குற்றம் சாட்டியதோடு, இனி எந்த காரணத்தை முன்னிட்டும் PST கட்டுமான நிறுவனத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படாது என்று தமிழக தி மு க அரசு உறுதியளித்திருந்த நிலையில், தற்போது சென்னை நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில் நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை அதே PST நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த காலத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறு என்று தி மு க அரசு ஏற்று கொள்கிறதா? நடந்த சம்பவங்களுக்கு PST நிறுவனம் பொறுப்பல்ல என்று தி மு க அரசு கூறுமேயானால், பின் அதற்கு யார் பொறுப்பு என்று குறிப்பிட வேண்டிய கடமையும் தி மு க அரசுக்கு உண்டு என்பதை உணர வேண்டும். எதன் அடிப்படையில் ஊழல் புரிந்த, தரக்குறைவான பணிகளை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்திற்கு தி மு க அரசு ஒப்பந்தத்தை மீண்டும் அளித்தது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விளக்க வேண்டும்" இவ்வாறு நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார்
-
ஸ்டாலினா? எடப்பாடியா? உண்மையிலேயே யார் 'கெத்து'? ரெக்கார்டு என்ன சொல்லுது? -
சென்னையில் எந்தெந்த சமூகத்தினருக்கு எம்.எல்.ஏ சீட்? திமுக பிரதிநிதித்துவ ஃபார்முலா! -
அடித்தாடும் ஸ்டாலின்.. இன்று 4 ஆம் கட்ட பரப்புரை.. தஞ்சாவூரில் தொடங்குகிறார் முதல்வர் -
"எனக்கும் மரணம் வரும்.. என்னைப் புதைத்தாலும் எனது திட்டங்களைப் புதைக்க முடியாது” - முதல்வர் ஸ்டாலின் -
Corona: முதல்வர் ஸ்டாலினே கொரோனாவால் போயிருப்பார்! ஆனால்..! எடப்பாடி பழனிசாமி சர்ச்சை பேச்சு! -
ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? நேரடியாக கேட்ட திமுக.. பதில் சொல்ல தயங்கும் காங்கிரஸ்! -
சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்டாலின்.. செல்ஃபி எடுத்த பயணிகள் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின்












Click it and Unblock the Notifications