தமிழகம் வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர்.. இரவுக்குள் பூண்டி ஏரியை அடையும்! கோடையில் சென்னைக்கு நிம்மதி
சென்னை: ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழகத்திற்கு வந்தடைந்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பே கிருஷ்ணா நதி நீர் தமிழகம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று தாமதமாக இன்று வந்தடைந்தது. இன்று இரவுக்குள் சென்னை பூண்டி ஏரியை அடையும் என அதிகாரிகள் கூறினர்.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டால் தண்ணீர் வற்றி குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உண்டாகும். இதனை தவிர்க்கும் விதமாக தெலுங்கு - கங்கை திட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் படி ஆந்திர அரசு தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 12 டிஎம்சி நீரை வழங்கி வருகிறது.

அந்த வகையில் ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து 12 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டு அது சென்னை பூண்டியில் உள்ள ஏரிக்கு வந்து சேர்கிறது. நடப்பு ஆண்டிற்கான தண்ணீரை ஆந்திர அரசு திறந்துவிடுவதாக கூறியது. அதன்படி ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் இன்று காலையில் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை வந்தடைந்தது.
கண்டலேறு அணையில் இருந்து சுமார் 152 கிலோமீட்டர் பயணித்த இந்த நீர், ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை எட்டியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பே தமிழகம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்று தாமதமாகவே வந்து சேர்ந்துள்ளது. தற்போது, தமிழக எல்லையில் வினாடிக்கு 43 கனஅடி நீர் வரத்து பதிவாகி வருகிறது. இன்று இரவுக்குள் கிருஷ்ணா நதி நீர் சென்னை பூண்டி ஏரியை அடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி













Click it and Unblock the Notifications