Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குப்பைமேனி தழை 400 நோய்களை தீர்க்குமே! குப்பையில் வளரும் ஆச்சரிய தங்கம்.. மூல நோயை விரட்டும் மூலிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயற்கை அன்னை நமக்கு வழங்கிய அற்புதமான கொடைகளில் ஒன்று குப்பைமேனி தழைகள் ஆகும்... குப்பைகளில் தானாக வளரக்கூடியது என்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்தாலும், இது உண்மையில் உடலின் குப்பைகளை மேனியில் இருந்து அகற்றுவதால் "குப்பைமேனி" என்று அழைக்கப்படுகிறது. இதிலுள்ள மருத்துவ குணங்கள் காரணமாகவே இதனை "மூலிகை தங்கம்" என்று சித்த மருத்துவம் போற்றுகிறது... இதன் அருமை பெருமைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போமா!

சென்னை போன்ற பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை எளிதாகக் கிடைக்கக்கூடிய குப்பைமேனி செடியில் அகாலிபமைடு, காலிபோல் அஸிடேட், அகாலிபைன், டிரைஅஸிட்டோனமைன் மற்றும் கெம்பெரால் போன்ற அரிய வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன. இவைதான் ஆஸ்துமா முதல் மூலநோய் வரை பல பிணிகளைத் தீர்க்கும் மருந்தாகச் செயல்படுகின்றன.

குப்பைமேனி தழைகள் நன்மைகள்

நம் உடம்பில் உள்ள நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துவதில் இந்த குப்பைமேனிக்கு நிகர் ஏதுமில்லை. இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்கும் முக்கியப் பிரச்சனை நரம்புத் தளர்ச்சி மற்றும் மூட்டு வலி என்றே சொல்லலாம்..

குப்பைமேனி இலைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து வருவதன் மூலம் நரம்புகள் பலமடைவதுடன், கால் வலி மற்றும் முழங்கால் வலி படிப்படியாக குறையும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்ட இந்த இலையைத் தினமும் இரண்டு மிளகுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

குப்பைமேனி இலைகள் சத்துக்கள்

வயிற்றுப் புழுக்கள் மற்றும் குடல் கிருமிகளை வெளியேற்ற, இதன் இலைத் தூளை விளக்கெண்ணெயுடன் கலந்து உட்கொள்ளலாம். குழந்தைகளுக்கு வயிற்றுப் பூச்சித் தொல்லை இருந்தால், ஒரு ஸ்பூன் இலைச் சாறு தருவது உடனடி பலன் அளிக்கும்.

சுவாச பிரச்சனைகளுக்கும் இது ஒரு சிறந்த தீர்வாகும். நிமோனியா மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு இதன் சாறு ஆயுர்வேத முறையில் மருந்தாக வழங்கப்படுகிறது. தொண்டை வலி, தொண்டைக்கட்டு இருப்பவர்கள் இதன் சாற்றில் சிறிது சுண்ணாம்பு கலந்து தொண்டையில் பூசினால் சளி மற்றும் கோழை வெளியேறிவிடும்.

சரும பாதுகாப்பு ஆரோக்கியம்

இந்த இலைகளை உலர்த்திப் பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிடுவதும் சளித் தொல்லைக்குச் சிறந்த மருந்தாகும். மேலும், மூலநோய் மற்றும் ரத்த மூலத்தால் அவதிப்படுபவர்கள் குப்பைமேனி இலைகளுடன் சின்ன வெங்காயம் மற்றும் வாழைப்பூவைச் சேர்த்து அரைத்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் ரத்தப்போக்கு கட்டுக்குள் வந்து நோய் குணமாகும்.

சரும பாதுகாப்பில் குப்பைமேனிக்கு தனி இடமுண்டு. குறிப்பாக பெண்களுக்கு முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க, குப்பைமேனி இலையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்துப் பூசி வந்தால் பூனை முடிகள் உதிர்ந்துவிடும்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு பெஸ்ட் மருந்து

பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளை எதிர்க்கும் ஆற்றல் இதற்கு இருப்பதால், கல் உப்புடன் சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளித்தால் சொறி, சிரங்கு நீங்கி சருமம் பொலிவு பெறும். தீக்காயங்கள் மற்றும் புண்கள் இருந்தால் மஞ்சளுடன் சேர்த்துப் பற்றுப் போடலாம். தலைவலிக்கு இதன் சாற்றை நெற்றியில் தடவினால் நிம்மதி கிடைக்கும்.

ஆனால் இத்தனை நன்மைகள் கொண்ட குப்பைமேனியை மருந்தாக உட்கொள்ளும் முன்பு, தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானது. குப்பையில் வளரும் இந்த மூலிகையைச் சரியாகப் பயன்படுத்தினால், அது நம் ஆரோக்கியத்திற்கும் வாழ்விற்கும் பெரும் செல்வமாக அமையும் என்பதில் ஐயமில்லை...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+