"ஆடிட்டர்"தான் காரணமாமே.. சசிகலா எடுத்த கடைசி அஸ்திரம்.. கனக்கச்சிதமாக நகரும் "போயஸ்" பாலிட்டிக்ஸ்
சசிகலா ரஜினியை சந்திக்க சிலர் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: அதிமுகவை கைப்பற்ற சசிகலா கையில் எடுத்துள்ள கடைசி அஸ்திரம், அவருக்கு போதுமான பலனை பெற்று தரும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகிறார்களாம்.. இந்த கடைசி அஸ்திரத்தை சசிகலா கையில் எடுக்க, என்னென்ன வழிகளை மேற்கொண்டார் என்பது குறித்த தகவல்கள் தற்போது லேசாக கசிந்து வருகின்றன.
அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும், பாஜக மேலிடத்தை பகைத்து கொண்டு அரசியல் செய்யும் தைரியம் அதிமுகவுக்கு இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அதேசமயம், அதிமுகவை கைப்பற்றிவிட வேண்டும் என்று இத்தனை நாளும் காத்து கிடந்த சசிகலாவின் முயற்சிக்கு, ஓரளவுதான் பலன் கிடைத்துள்ளது..

பாஜக
ஆனாலும் கட்சியை தான் நினைத்தது போல கைப்பற்ற முடியவில்லை எதிர்பார்த்த முக்கிய நிர்வாகிகள், மாஜிக்கள் சசிகலாவுக்கு நேரடியாக ஆதரவும் தரவில்லை.. ஒருங்கிணைப்பாளர் தேர்தலையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சறுக்கிவிடுவதால் கவலையிலேயே இருந்துள்ளார் சசிகலா.. அதுமட்டுமல்ல, கடந்த சில மாதங்களாகவே, சசிகலாவின் 2வது இன்னிங்ஸ் அரசியலுக்காக "ஆடிட்டர்" ஒருவர் டெல்லியில் சில முயற்சிகளை எடுத்து வந்து கொண்டிருந்தாராம்.. ஆனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை என தெரிகிறது..

சசிகலா
எனவே, டெல்லியின் ஆதரவை தன்னால் பெற முடியவில்லை என்பதை வெளிப்படையாகவே சசிகலாவிடம் சொல்லிய அந்த ஆடிட்டர், ரஜினியின் உதவியை நீங்கள் நாடலாமே, அவரை சந்திக்க முயற்சி செய்யுங்கள் என்று ஒரு ஐடியாவையும் தந்திருக்கிறார்.. மேலும், டெல்லியின் ஆதரவு இல்லாமல், அதிமுகவை கைப்பற்ற முடியாது என்கிற அரசியலையும், அதனை மையப்படுத்தி ரஜினியிடம் என்னென்ன விசயங்களைப் பேசலாம் என்றும் சசிகலாவுக்கு அந்த "ஆடிட்டர்" விரிவாக எடுத்துரைத்தாராம்.

சந்திப்பு
இதற்கு பிறகுதான், ரஜினியை சந்திக்க சசிகலா முடிவு செய்துள்ளார்.. இந்த சந்திப்பினால், வேறு வழியில்லாமல் அதிமுகவே வாயடைத்து போகும் என்றும் நம்பி உள்ளார்.. அதன்படியே, தன்னுடைய கடைசி அஸ்திரத்தை பயன்படுத்த, லதா ரஜினிகாந்த்திடம் பேசியுள்ளார்.

லதா
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுடன் சசிகலா இருந்த காலத்தில், லதாவிடம் நெருக்கமாக பேசும் நட்பு சசிகலாவுக்கு உண்டு... பல்வேறு சந்தர்ப்பங்களில் லதாவுக்கு பல வகையான உதவிகளை செய்தவர்தான் சசிகலா... அந்த வகையில், சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்து தி.நகர் இல்லத்தில் சசிகலா தங்கியிருந்த போதுகூட, சசிகலாவின் உடல்நலனை விசாரித்திருக்கிறார் லதா... ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி சசியும், லதாவும் அப்போதே விவாதித்தும் இருக்கிறார்கள்.. அந்த அளவுக்கு இருவருக்குள்ளும் நட்பு உண்டு.
Recommended Video

ஆடிட்டர்
அந்த வகையில்தான், உங்களை சந்திக்க விரும்புகிறேன் என்று லதாவிடம், சசிகலா கேட்டதாக தெரிகிறது.. உடனே அதற்கு ஒப்புக்கொண்டு ரஜினியிடம் லதா பேச, ரஜினியும் ஓகே சொல்ல, சந்திப்பு உடனடியாக நடந்திருக்கிறது.. சந்திப்பின்போது, "ஆடிட்டர்" தன்னிடம் சொன்ன விவரங்கள் அத்தனையும் ரஜினியிடம் ஒன்றுவிடாமல் சசிகலா எடுத்து சொல்லி, தான் அதிமுகவிற்குள் நுழைய டெல்லியிடம் பேசுமாறு ரஜினியிடம் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஓபன் டாக்
அனைத்தையும் பொறுமையாக கேட்ட ரஜினி, இந்த மாதிரியான அரசியலுக்குள் தன்னை நுழைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று ஓபனாகவே சசிகலாவிடம் சொல்லிவிட்டாராம்.. ஆனால், லதாதான், சசிகலாவுக்காக ரஜினியிடம் நிறைய முறை பேசியிருக்கிறார்... அதன்பிறகே ரஜினி சசிகலா விவகாரத்துக்கு சம்மதித்ததாகவும், டெல்லிவரை தொடர்பு கொண்டு அவருக்காக பேசியதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன..

அதிரடிகள்
இதில், இன்னொன்றையும் சொல்கிறார்கள், திமுக மீதிருந்த நல்ல அபிப்பிராயம் இப்போது ரஜினிக்கு இல்லையாம்.. திமுக அரசில் அதிருப்திகள் வெடிக்க ஆரம்பித்துள்ளதும், அதிமுகவில் நடந்ததை விட அதிகமாகத்தான் இப்போது நடக்கிறது, அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதையும் ரஜினிக்கு சிலர் உணர்த்தி உள்ளதாக தெரிகிறது.. எனவே, நாளுக்கு நாள் திமுக அரசு மீது நல்லெண்ணம் ரஜினிக்கு குறைந்து வருகிறதாம்.. இதை உணர்ந்துதான், அரசியல் ஆசையை ரஜினிக்கு மீண்டும் தூண்டியுள்ளாராம் சசிகலா... அப்படியானால் "ரஜினி 2.0" மீண்டும் தமிழக அரசியலில் உருவெடுக்குமா என்பது தெரியவில்லை.. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications