Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்கள், இதர மாவட்டங்கள்.. எவை எவற்றுக்கு அனுமதி? முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஜூன் 7-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Recommended Video

    June 14-ந் தேதி வரை தளர்வுகளுடன் Lockdown நீட்டிக்கப்படும்- Mk Stalin | Oneindia Tamil

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவியதால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இந்த லாக்டவுன் ஜூன் 7-ந் தேதி வரை முதல் முறையாக நீட்டிக்கப்பட்டது.

    Lockdown extended with some relaxations till june 14 in TN

    தற்போது கொரோனா தொற்று சற்று குறைந்து வரும் நிலையில் தளர்வுகளுடன் லாக்டவுன் நீடிக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போதைய லாக்டவுன் தளர்வுகளுடன் ஜூன் 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஜூன் 7-ந் தேதி முதல் காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். பழங்கள், பூகடைகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் 30% பணியாளர்களுடன் இயங் அன்னுமதி வழங்கப்பட்டுள்ளது.

    முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு விவரம்:

    கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்.

    நோய் தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஜூன் 7 முதல் அனுமதிக்கப்பட்டுள்ளவை விவரம்:

    - மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்

    - காய்கறி, பழம்,பூ விற்பனை நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

    - மொத்த விற்பனைக்காக மட்டும் மீன் சந்தைகளுக்கு அனுமதி

    - மொத்த விற்பனைக்காக மட்டும் இறைச்சி கூடங்களுக்கு அனுமதி

    - அரசு அலுவலகங்களில் 30% பணியாளர்கள் செயல்பட அனுமதி

    - சார்பதிவாளர் அலுவலகங்களில் 50% டோக்கன்கள் மட்டும் வழங்கி பதிவுகள் மேற்கொள்ல் வேண்டும்

    - தீப்பெட்டி தொழிற்சாலைகளில் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி

    11 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் ஜூ 14 வரை அனுமதி விவரம்

    - மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்

    - காய்கறி, பழம்,பூ விற்பனை நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

    - மொத்த விற்பனைக்காக மட்டும் மீன் சந்தைகளுக்கு அனுமதி

    - மொத்த விற்பனைக்காக மட்டும் இறைச்சி கூடங்களுக்கு அனுமதி

    - அரசு அலுவலகங்களில் 30% பணியாளர்கள் செயல்பட அனுமதி

    - சார்பதிவாளர் அலுவலகங்களில் 50% டோக்கன்கள் மட்டும் வழங்கி பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்

    - வீட்டு பராமரிப்பு பணிகளுக்கு இ ரெஜிஸ்டிரேசன் தேவை

    - எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கார்பென்டர்கள், மோட்டார் மெக்கானிக்களுக்கும் இ ரெஜிஸ்டிரேசன் தேவை

    - ஹார்ட்வேர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்

    - இருசக்கர வாகனம், சைக்கிள் பழுது பார்க்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்

    - ஸ்டேசனரி விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை இயங்கலாம்

    - வாடகை வாகனங்கள், ஆட்டோக்களில் செல்ல இ பதிவு கட்டாயம்

    தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்:

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+