Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை பதுக்கினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. கேஸ் சிலிண்டர்கள் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கிடைக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகளுக்கு வணிக சிலிண்டர் விநியோகம் குறைக்கப்பட்டது. இதனால், வீட்டு உபயோக சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தால், பொதுமக்கள் வீட்டு உபயோக சிலிண்டர் கேட்டு, கேஸ் ஏஜென்சி நிறுவனங்களிடம் முன்பதிவு செய்வது அதிகரித்தது.

LPG Cylinder Hoarding Tamil Nadu Govt Warns of Goondas Act Action

மேலும், சிறிய ஹோட்டல்கள், டீக்கடைகள் நடத்துபவர்கள், வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. வணிக சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், வீட்டு உபயோக சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக ரீதியிலான தேவைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து உரிய ஆலோசனைகள் நடத்தி நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, எல்பிஜி சிலிண்டர்களை பதுக்கினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர்களை பதுக்கல் செய்வது அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதோ கடும் குற்றமாகும், எனவே சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள். அரசு பள்ளி கல்லூரி மாணவர் மாணவியர் விடுதிகள் மற்றும் காலை சிற்றுண்டிகளுக்கு வழங்கப்படும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கல் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகின்றது. உணவகங்கள் மற்றும் வணிகர்களுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர்கள் மட்டும் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் 70% ஆக உயர்த்தியுள்ளது. ஆகையால் நாளை முதல் 70% விநியோகிப்பதாக தெரிவித்துள்ளது.

எரிவாயு சிலிண்டர்களை பதுக்கல் செய்வது அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதோ கடும் குற்றமாகும். எனவே சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்யும் பணியாளர்கள் மற்றும் முகவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எரிவாயு சிலிண்டர்கள் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கிடைக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+