LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை!
சென்னை: எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை பதுக்கினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. கேஸ் சிலிண்டர்கள் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கிடைக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகளுக்கு வணிக சிலிண்டர் விநியோகம் குறைக்கப்பட்டது. இதனால், வீட்டு உபயோக சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தால், பொதுமக்கள் வீட்டு உபயோக சிலிண்டர் கேட்டு, கேஸ் ஏஜென்சி நிறுவனங்களிடம் முன்பதிவு செய்வது அதிகரித்தது.

மேலும், சிறிய ஹோட்டல்கள், டீக்கடைகள் நடத்துபவர்கள், வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. வணிக சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், வீட்டு உபயோக சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக ரீதியிலான தேவைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து உரிய ஆலோசனைகள் நடத்தி நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, எல்பிஜி சிலிண்டர்களை பதுக்கினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர்களை பதுக்கல் செய்வது அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதோ கடும் குற்றமாகும், எனவே சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள். அரசு பள்ளி கல்லூரி மாணவர் மாணவியர் விடுதிகள் மற்றும் காலை சிற்றுண்டிகளுக்கு வழங்கப்படும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கல் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகின்றது. உணவகங்கள் மற்றும் வணிகர்களுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர்கள் மட்டும் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் 70% ஆக உயர்த்தியுள்ளது. ஆகையால் நாளை முதல் 70% விநியோகிப்பதாக தெரிவித்துள்ளது.
எரிவாயு சிலிண்டர்களை பதுக்கல் செய்வது அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதோ கடும் குற்றமாகும். எனவே சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்யும் பணியாளர்கள் மற்றும் முகவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எரிவாயு சிலிண்டர்கள் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கிடைக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications