எடப்பாடி பழனிச்சாமி அவர்களே.. அவையில் பேசும்போது கைவசம் சரியான தகவல்களை வைத்திருங்கள்.. மா.சு. அட்வைஸ்
சென்னை: சட்டசபையில் பேசும் போது சரியான தகவல்களை தெரிந்து வைத்துக் கொண்டு பேசுவதுதான் நல்லது என எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமியை அமைச்சர் மா சுப்பிரமணியன் சாடினார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுக் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சிக் காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது என பேசியிருந்தார்.
இது தொடர்பாக நான் நிறைய முறை விளக்கி பேசியிருக்கிறேன். 2011 ஆம் ஆண்டு சட்டசபையில் பிப்ரவரி மாதம் அன்றைய முதல்வர் கருணாநிதி, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வர முடிவு செய்தார்.

இடம் தேர்வு
இதையொட்டி 6 மருத்துவக் கல்லூரிகளுக்கான நிர்வாகத் தேர்வு, இடம் தேர்வு, நிதி ஒப்படைப்பு போன்ற பல்வேறு விஷயங்களை அன்றைக்கே செய்திருந்தார். இந்த கல்லூரிகளையெல்லாம் எங்கள் ஆட்சியில் கொண்டு வந்தோம் என தம்பட்டம் அடித்துக் கொள்வார்களே என ஏற்கெனவே நான் பேரவையில் தெரிவித்திருந்தேன்.

மீண்டும் பதிவு
நான் சொன்னதையே எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் பதிவு செய்திருந்தார். மேலும் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு 150 மாணவர்கள் என்ற வீதத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு 1,650 மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். அந்த மாணவர்களை இந்த ஆண்டே சேர்த்துக் கொள்ள வேண்டும் என சொல்லி, துறையின் செயலாளர், உயரதிகாரிகளுடன் டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரையும் கல்வித் துறை அமைச்சரையும் சந்தித்து பேசியிருந்தோம்.

பிரதமருடன் முதல்வர் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து இதுகுறித்து பேசியிருக்கிறார். அந்த வகையில் 11 மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு வரும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம். இவற்றையெல்லாம் எதையுமே தெரிந்து கொள்ளாமல் 5200 மாணவர்களின் மருத்துவ கனவு வீணாகி போனதாக தவறான தகவலை எடப்பாடி பழனிச்சாமி பதிவு செய்துள்ளார்.

நகலை பார்த்த மா.சு
அவரது பேச்சின் நகலையும் வாங்கி பார்த்தேன். எனவே சட்டசபையில் பேசும் போது அதுகுறித்த சரியான தகவலைத் தெரிந்து கொண்டு பேசினால் மட்டுமே அது சரியாக இருக்கும். எடப்பாடி பழனிச்சாமி இனிமேலாவது அதைச் செய்வார் என எதிர்பார்க்கிறோம் என மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
-
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications