4 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: அறிக்கை தாக்கல் செய்ய தவறிய 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
கடலூர் குள்ளஞ்சாவடி போலீஸ் பதிவு செய்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தமிழக டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட் இன்று ஆணையிட்டுள்ளது. 2017 முதல் இதுவரை குள்ளஞ்சாவடி ஆய்வாளர்களாக பணியாற்றிய 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புகாரை முடித்து வைப்பதாக இருந்தால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தர வேண்டும். புகாரை விசாரித்த குற்றப் பத்திரிகையோ, அறிக்கையோ தாக்கல் செய்யப்பட வேண்டும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்ய தவறிய போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications