4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு
Recommended Video
சென்னை:திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் பிரபல சினிமா தயாரிப்பாளரும், மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணியின் துணை செயலாளர் ஜி.என். அன்புசெழியன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கு விருப்ப மனு வினியோகம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் விருப்ப மனுக்களை பெற்றனர். பின்னர் அதனை பூர்த்தி செய்து தாக்கல் செய்தனர்.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு
விருப்ப மனு அளித்தனர்
காலை முதலே இந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுகவினர் பலர் விருப்ப மனு அளித்தனர். அதற்கான விண்ணப்பக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாயை செலுத்தி அவர்கள் மனு அளித்தனர்.
நேர்காணல் நிறைவு
மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிருப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் மேற்கொண்டனர்.
திருப்பரங்குன்றம் தொகுதி
அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற்றாலும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான வாக்குப்பதிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காரணம்... திருப்பரங்குன்றம் தேர்தல் வெற்றி நீதிமன்றம் வரை சென்றது தான்.
அன்பு செழியன் மனு
இந்த தொகுதியில் பலர் விருப்ப மனு செய்திருந்தாலும்... அனைவரும் உற்று நோக்குவது மதுரை அன்பு செழியனைத் தான். அதிமுகவின் மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணியின் துணை செயலாளராக உள்ளார்.
சினிமா பைனான்சியர்
திரைப்பட தயாரிப்பாளர், சினிமா பைனான்சியர் அன்பு செழியன் என்றால் தான் பலருக்கும் நினைவு வரும். அன்புசெழியனும், விருப்ப மனு தாக்கல் செய்து, நேர்காணலில் கலந்துகொண்டு விட்டார். நேர் காணல் முடிந்துவிட்ட நிலையில் யார், யார் வேட்பாளர்கள் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.