Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு வரலையா? அக்கவுண்டில் பிரச்சனை இருக்கலாம்? எப்படி சரி செய்வது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதி பல பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், சில பெண்களுக்கு பணத்தைப் பெறுவதில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக செயல்படாத அல்லது நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளை அளித்தவர்களே இந்த பிரச்சினையை அதிகமாக எதிர்கொள்கிறார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளின் கணக்குகளில் முன்கூட்டியே தொகை வரவு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிலர் பணம் வந்திருந்தாலும் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக புதிதாக திட்டத்தில் இணைந்த பயனாளிகளில் இந்த சிக்கல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. பழைய பயனாளிகளுக்கு பெரும்பாலும் இத்தகைய பிரச்சினைகள் இல்லையெனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் விளக்குகின்றன.

Magalir urimai thogai mk stalin Tamil Nadu Assembly Election 2026

இந்தத் திட்டத்தின் நிதி வழங்கும் முறை நேரடி நிதி பரிமாற்றம் (Direct Benefit Transfer - DBT) ஆகும். அதாவது, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செயல்பாட்டிலுள்ள வங்கி கணக்கிற்கே அரசு நேரடியாக பணத்தை அனுப்புகிறது. ஆதார் எண்ணுடன் கடைசியாக இணைக்கப்பட்ட வங்கி கணக்கே செயல்பாட்டு கணக்காக கருதப்படுகிறது. எனவே பயனாளிகள் தற்போது பயன்படுத்தாத அல்லது நீண்ட காலமாக பணப் பரிவர்த்தனை நடைபெறாத கணக்கை முன்பாக வழங்கியிருந்தால், அந்த கணக்கு முடக்கப்பட்டிருக்கலாம் அல்லது செயலிழந்திருக்கலாம்.

இத்தகைய சூழலில் பயனாளிகள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலில், சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரில் சென்று கணக்கின் நிலையை சரிபார்க்க வேண்டும். கணக்கு செயல்படாமல் இருந்தால், ஒரு குறைந்த தொகையை வைப்பு செய்தோ அல்லது பணம் எடுத்தோ கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம். இது பல சமயங்களில் பிரச்சினையை உடனடியாக தீர்க்கும் என கூறப்படுகிறது.

மேலும், வங்கி கணக்கில் KYC விவரங்கள் புதுப்பிக்கப்படாமல் இருந்தாலும் அரசு நிதி வரவு பெறுவதில் தடைகள் ஏற்படலாம். ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட அடையாள ஆவணங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். KYC புதுப்பித்த பிறகு நிதி வரவு தொடர்பான சிக்கல்கள் பெரும்பாலும் தீர்ந்துவிடும் என வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பணம் வரவு தொடர்பாக தகவல் பெற முடியாதவர்கள் அல்லது சந்தேகங்கள் உள்ளவர்கள் தங்களது பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மகளிர் உரிமைத்தொகை உதவி மையத்தை அணுகலாம். அங்கு கணக்கு நிலை, DBT இணைப்பு, ஆதார் விவரம் உள்ளிட்ட தகவல்கள் சரிபார்க்கப்படுகின்றன. தேவையான வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது.

இத்திட்டம் தொடர்பான தகவல்களை பெறும்போது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அரசு இணையதளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் OTP, வங்கி கணக்கு எண், ஆதார் விவரம் போன்ற முக்கிய தகவல்களை பகிர வேண்டாம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மொத்தத்தில், செயல்படாத வங்கி கணக்கால் உரிமைத்தொகை பெற முடியாதவர்கள் வங்கி கணக்கை செயல்படுத்தி, KYC புதுப்பித்து, தேவையெனில் உதவி மையத்தை அணுகினால் பிரச்சினை எளிதில் தீரும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழக அரசின் நலத்திட்ட நிதி நேரடியாக பயனாளிகளிடம் சென்றடைவதை உறுதி செய்ய தேவையான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+