Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைவாசிகளே.. இந்த 2 நாளைக்கு தண்ணீர் வராது.. குடிநீர் சப்ளை நிறுத்தம்.. எந்தெந்த ஏரியா தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு, 6 பகுதிகளில் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது.. ஏன் தெரியுமா? அந்த 6 பகுதிகள் என்னென்ன தெரியுமா?

கீழ்ப்பாக்கம்‌ சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர்‌ எடுத்துச்‌செல்லும்‌, பிரதான உந்து குழாயில்‌ இணைப்பு பணிகள்‌ சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனத்தால்‌ (CMRL), நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங்‌ சாலையில்‌ மேற்கொள்ளப்படுகிறது.

Major alert for Chennai People and 6 areas will not have water supply today and tomorrow

இந்த காரணத்துக்காக, சில பகுதிகளுக்கு குழாய்கள்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ குடிநீர் விநியோகம் இன்றும் நாளையும் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு இதுதான்:

உந்து குழாய்: "கீழ்ப்பாக்கம்‌ குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர்‌ எடுத்துச்‌ செல்லும்‌ 750 மி.மீ விட்டமுள்ள பிரதான உந்து குழாயுடன்‌ 750 மி.மீ., விட்டமுள்ள பிரதான உந்து குழாயை இணைக்கும்‌ பணிகள்‌ சென்னை மெட்ரோ ரயில்‌ நிறுவனத்தால்‌ (CMRL) ஸ்டெர்லிங்‌ சாலையில்‌ மேற்கொள்ளப்படுகிறது.

இதனால், இன்று அதாவது ஆகஸ்ட் 31ம் தேதி மாலை 7 மணி முதல்‌ நாளை செப்டம் 1ம் தேதி, பிற்பகல் 3 மணி வரை மண்டலம்‌-9 (தேனாம்பேட்டை) உட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ குடிநீர்‌ விநியோகம்‌ நிறுத்தம்‌ செய்யப்படுகிறது" என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகுறிப்பு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் இணை இயக்குநர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.‌

ராயப்பேட்டை: மண்டலம்-9‌ பகுதிகளான நுங்கம்பாக்கம்‌, ஆயிரம்‌ விளக்கு, தியாகராய நகர்‌, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, இராயப்பேட்டை என சென்னை பெருநகரின் முக்கிய அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் குடிநீர் வராது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள்‌, நிறுவனங்கள், முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு சென்னை குடிநீர் வாரியம் அறிவுரை வழங்கி உள்ளது‌.

லாரி தண்ணீர்: அதுமட்டுமல்ல, அவசரத்‌ தேவைகளுக்கு லாரிகள்‌ மூலம்‌ (Dial For Water) குடிநீர்‌ பெற்றுக்கொள்ள வாரியத்தின்‌ https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்‌.

குடிநீர்‌ இணைப்பு இல்லாத பகுதிகள்‌ மற்றும்‌ அழுத்தம்‌ குறைவான பகுதிகளுக்கு குடிநீர்‌ தொட்டிகள்‌ மற்றும்‌ தெரு நடைகளுக்கு லாரிகள்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ குடிநீர்‌ விநியோகம்‌ எந்தவித தடையுமின்றி வழக்கம்போல்‌ சீரான முறையில்‌ மேற்கொள்ளப்படும்‌ என்று, அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+