அசல் ஆவணம் இல்லாவிடடால் பத்திரப்பதிவு இனி இல்லை.. புதிய சட்டத்தில் பத்திரம் தொலைந்தால் வழி என்ன?
சென்னை: பத்திரப் பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் மூதாதையர் சொத்தாக இருந்து மூலப்பத்திரம் இல்லையெனில் வருவாய்த்துறையின் பட்டா சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். சொத்து அடமானத்தில் இருந்தால், அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அசல் ஆவணங்கள் தொலைந்து போயிருந்தால், காவல்துறையில் புகாரளித்து 'கண்டறியமுடியவில்லை' என்ற சான்றிதழ் பெற வேண்டும். மேலும் உள்ளூர் நாளிதழில் விளம்பரம் செய்து அதனையும் தாக்கல் செய்ய வேண்டும்.
பதிவுச் சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.இந்த சட்டத்திருத்தம் காரணமாக நில மோசடிகளைத் தடுக்க தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய அதிகாரம் கிடைத்துள்ளது. இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் :

அசல் ஆவணங்கள் கட்டாயம்
இனி எந்தவொரு சொத்தையும் விற்பனை செய்யவோ அல்லது தானமாக வழங்கவோ பதிவு அலுவலகத்திற்குச் செல்லும்போது, அந்தச் சொத்தின் அசல் ஆவணம் கண்டிப்பாகத் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்கு முன், அசல் ஆவணம் தொலைந்துவிட்டதாகக் கூறி பொய் புகார் அளித்தோ அல்லது நகல் ஆவணங்களை வைத்தோ முறைகேடாகச் சொத்துப் பதிவுகள் நடந்தன. இனி அப்படி பத்திரப்பதிவு செய்யவே முடியாது.
இந்த சட்டம் மோசடிப் பத்திரப் பதிவில் ஈடுபடுபவர்களுக்குச் சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது. பொய்யான தகவல்களை அளித்து சொத்துப் பதிவு செய்பவர்களுக்கும், அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளுக்கும் 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
விதிவிலக்குகள்
சில குறிப்பிட்ட நேரங்களில் அசல் ஆவணங்கள் இல்லையென்றாலும் பதிவு செய்ய அனுமதி உண்டு:
அரசு நிலங்கள்: அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகள் நிலங்களை மாற்றும்போது.
நீதிமன்ற உத்தரவு: நீதிமன்றத்தின் மூலம் சொத்து விற்பனை நடக்கும்போது.
பாகப்பிரிவினை: குடும்பத்திற்குள் நடக்கும் பாகப்பிரிவினையின் போது ஒருவரிடம் மட்டும் அசல் இருந்தால் போதும் (மற்றவர்களுக்குச் சான்றளிக்கப்பட்ட நகல் தேவைப்படும்).
பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை:
பாதுகாப்பு: உங்கள் அசல் ஆவணங்களை மிகப்பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அது தொலைந்து போனால், காவல்துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை' (Non Traceable Certificate) என்ற சான்றிதழ் பெறுவது உட்பட பல சட்ட நடைமுறைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்த சட்டப்படி மூதாதையர் சொத்தாக இருந்து மூலப்பத்திரம் இல்லையெனில் வருவாய்த்துறையின் பட்டா சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.சொத்து அடமானத்தில் இருந்தால், அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அசல் ஆவணங்கள் தொலைந்து போயிருந்தால், காவல்துறையில் புகாரளித்து 'கண்டறியமுடியவில்லை' என்ற சான்றிதழ் பெற வேண்டும். மேலும் உள்ளூர் நாளிதழில் விளம்பரம் செய்து அதனையும் தாக்கல் செய்ய வேண்டும்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications