தேசியக் கட்சியில் இணைகிறார் கமல் கட்சி Ex நிர்வாகி.. மேலிட அப்பாயின்ட்மெண்ட்டுக்கு காத்திருப்பு..!
சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவரும், கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமானவர் என அறியப்பட்டவருமான முருகானந்தம் தேசியக் கட்சி ஒன்றில் விரைவில் இணையவிருக்கிறார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்ட முருகானந்தம், அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தோல்வியை தழுவினார்.
கமல்ஹாசனுக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அண்மையில் மக்கள் நீதி மய்யத்திலிருந்து வெளியேறிய இவரை தேசியக் கட்சி ஒன்றின் மாநில தலைமை தங்கள் பக்கம் அழைத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம்
திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த முருகானந்தம் மக்கள் நீதி மய்யத்தின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர். பொறியாளர், ரோட்டர் சங்கத்தின் முன்னாள் ஆளுநர், தன்னம்பிக்கை பேச்சாளர் என பன்முகங்களை கொண்ட இவர், நூற்றுக்கணக்கானோருக்கு தனது நிறுவனம் மூலம் பிழைப்பு கொடுத்து வருகிறார். பொதுவாழ்க்கையில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், அரசியலுக்கு வருவதற்கு முன்பே ரோட்டரி சங்கங்கள் மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்கியவர்.

கருத்து வேறுபாடு
மக்கள் நீதி மய்யத்தின் தலைமையகத்தில் பவர்ஃபுல் மனிதராக வலம் வந்த இவர், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் களம் கண்டு தோல்வியை தழுவினார். கமல்ஹாசனின் திட்டமிடாத செயல்பாடுகளும், கூட்டணியும் தான் கட்சியின் தோல்விக்கு காரணம் எனக் கூறி ம.நீ. ம.விலிருந்து வெளியேறி கமலுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

நண்பர்கள்
இவர் விலகிய தருணத்தில் சந்தோஷ்பாபு, மகேந்திரன், பத்மப்பிரியா, போன்றோரும் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகினார்கள். இதில் சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ். அகாடமியை சொந்தமாக ஆரம்பித்து அதில் கவனம் செலுத்தத் தொடங்கிய நிலையில், மகேந்திரன் திமுகவில் இணைந்து அக்கட்சியின் தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். மகேந்திரன் அளவுக்கு முருகானந்ததுக்கு திமுகவில் வரவேற்பும் இல்லை அழைப்பும் இல்லை. காரணம் மகேந்திரன் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர், இவர் திருச்சியை சேர்ந்தவர்.

இணைப்பு வைபவம்
திருச்சியில் ஏற்கனவே திமுக வலிமையாக உள்ளதால் முருகானந்தத்தை கட்சியில் இணைக்க முதல்வர் ஸ்டாலினும் விரும்பவில்லை. இந்நிலையில் முருகானந்தத்தை தொடர்பு கொண்ட தேசியக் கட்சியின் மாநில தலைமை, தங்கள் கட்சியில் உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என அழைப்பு விடுத்திருக்கிறது. டெல்லி மேலிடத்தின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தால் தலைநகரிலேயே இணைப்பு வைபம் கூட நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications