இருளில் மூழ்கிய ஈசிஆர்..பலத்த காற்றுடன் கரையைக்கடக்கும் மாண்டஸ்..கொட்டும் கனமழை
சென்னை: மாண்டஸ் புயல் பலத்த காற்றுடன் கரையைக் கடந்து வருகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் கிழக்குக் கடற்கரைச் சாலை இருளில் மூழ்கியுள்ளது.
மாண்டஸ் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளதால் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு இடையிலான ஈசிஆர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்குக் கடற்கரைச் சாரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.

புயல் கரையை கடக்கும்போது பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும். மின் கம்பங்கள், ஜேசிபி இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தேவைக்கு ஏற்ப வைக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் மட்டும் மின் தடை செய்ய வேண்டும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து தீவிர புயலாக மாறியது. மாலையில் வலு குறைந்து புயலாக மாறியது. மாமல்லபுரத்திற்கு அருகே தற்போது புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. சென்னைக்கு அருகே 100 கிலோ மீட்டர் தொலைவில் புயலின் மையப்பகுதி உள்ளது. தரைக்காற்று பலமாக வீசுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை,புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்குக் கடற்கரை சாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இருளில் மூழ்கியுள்ளது. அதேபோல் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications