ஆட்சியில் பங்கு! செல்வப்பெருந்தகை எச்சரித்தும்! மீண்டும் திமுகவை சீண்டிய மாணிக்கம் தாகூர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா) அமைச்சரவையில் அக்கட்சியின் 7 அமைச்சர்களுடன் 4 காங்கிரஸ் கட்சி அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளார்கள். இந்த அதிகாரப் பகிர்வு பின்பற்ற வேண்டிய மாடல் என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

Manickam Tagore

இதுகுறித்து மாணிக்கம் தாகூர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஜார்கண்டின் தற்போதைய அரசு, முன்தேர்தல் கூட்டணி → நிலையான பிந்தைய கூட்டணி ஆட்சி என உருவானது. பகிர்ந்த இலக்குகள், அதிகாரப் பகிர்வு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தால், ஒற்றுமை பிளவைக் களைய முடியும் என்பதற்கான தெளிவான நிரூபணம் இது.

JMM தலைமையிலான INDIA கூட்டணி, தேர்தலுக்கு முன்பே இடப்பங்கீட்டை ஒருங்கிணைத்து போட்டியிட்டது. வாக்குகள் சிதறாமல், BJP / RSSக்கு எதிராக வாக்காளர்களுக்கு தெளிவான மாற்று வழங்கப்பட்டது.

அதிகாரம் வந்த பின், இந்த கூட்டணி 81 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் தெளிவான பெரும்பான்மையுடன் அரசு அமைத்தது. பிந்தைய குதிரை வியாபாரம் அல்ல - ஒன்றாகப் போராடியவர்கள், இன்று ஒன்றாக ஆட்சி செய்கிறார்கள்.

ஏன் இது வெற்றி பெறுகிறது?

🔹 பழங்குடியினர் உரிமைகள், நலத்திட்டங்கள், கூட்டாட்சி மதிப்புகள் குறித்த பொதுவான உறுதி
🔹 மாநிலத்தின் விருப்பங்களுக்கு மதிப்பு, சமநிலையான ஆட்சி
🔹 தேர்தலுக்கு முன்பே அமைச்சரவை, பொறுப்புகள் குறித்த தெளிவு
➡️ இது கூட்டணிக்குள் நம்பிக்கையும் பொறுப்புணர்வையும் உருவாக்குகிறது.

இந்த கூட்டணியின் உறுதியை மேலும் வலுப்படுத்துவது,
அன்புத் தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கும், மக்கள் தலைவர் முதல்வர் ஹேமந்த் சோரேன் அவர்களுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும் கொண்ட அரசியல் உறவு ஆகும்.
அந்த நம்பிக்கையே INDIA கூட்டணியின் அடித்தளம்.

மக்களின் தலைவர் ஹேமந்த் சோரேன் தலைமையிலான (2024-25) அமைச்சரவையில், முதல்வர் உட்பட 12 அமைச்சர்கள் உள்ளனர்:
✔ JMM - 7 அமைச்சர்கள் (முதல்வர் உட்பட)
✔ காங்கிரஸ் - 4 அமைச்சர்கள்
✔ RJD - 1 அமைச்சர்
இது சட்டமன்ற வலிமையை அடிப்படையாகக் கொண்ட நியாயமான அதிகாரப் பகிர்வின் பிரதிபலிப்பு.

காங்கிரஸ் அமைச்சர்கள் & முக்கிய துறைகள்:

🔹 ராதாகிருஷ்ண கிஷோர் - நிதி, வணிக வரி, திட்டமிடல் & வளர்ச்சி, நாடாளுமன்ற விவகாரங்கள்
→ பட்ஜெட், பொருளாதாரம், சட்டமன்ற செயல்பாடுகளில் முக்கிய பங்கு.

🔹 இர்ஃபான் அன்சாரி - சுகாதாரம், மருத்துவக் கல்வி & குடும்ப நலம்; உணவு, பொது விநியோகம்; பேரிடர் மேலாண்மை
→ சமூக நலத்தின் மையத் துறைகள்.

🔹 தீபிகா பாண்டே சிங் - ஊரக உள்ளாட்சி, ஊரகப் பணிகள், ஊரக வளர்ச்சி
→ அடித்தள ஆட்சியும் கிராம முன்னேற்றமும்.

🔹 ஷில்பி நேஹா திர்கி - வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, கூட்டுறவுகள்
→ விவசாயிகள் மற்றும் ஊரக பொருளாதாரத்தின் முதுகெலும்பு.

இந்த துறைப் பகிர்வு மூலம், பொருளாதார திட்டமிடல், சுகாதாரம், ஊரக வளர்ச்சி, வேளாண்மை போன்ற முக்கிய தளங்களில்
காங்கிரஸ் மையப் பங்கு வகித்து, கூட்டணி வாக்குறுதிகளை நடைமுறையில் நிறைவேற்றுகிறது.

நிலையற்ற, வாய்ப்புக்காக அமைக்கப்படும் கூட்டணிகளுக்கு மாறாக,
இந்த மாடலில் பொறுப்புகளின் தெளிவு, நம்பகமான தலைமைகள், கொள்கை ஒத்திசைவு உள்ளது. அதனால் தான் JMM தலைமையிலான கூட்டணி, ஜார்கண்டின் மிகச் சிறந்த மற்றும் நிலையான கூட்டணி அரசுகளில் ஒன்றாக விளங்குகிறது. பின்பற்ற வேண்டிய மாடல். இவ்வாறு அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு என வலியுறுத்தும் நிலையில் மாணிக்கம் தாகூர் இரண்டாவது முறையாக வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+