மணிப்பூர் வன்முறை.. சென்னையில் மின்சார ரயில்கள் மறிப்பு .. திடீரென போராட்டத்தில் குதித்த மாணவர்கள்
சென்னை: மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து, சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரத்தை பார்த்து பலரும் கொதித்து போய் இருக்கிறார்கள். நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தும் ஆதரித்தும் மாறி மாறி நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. ஒரு கட்டத்தில் கலவரம் வெடித்தது. . கடந்த மே மாதம் 4 ம் தேதி குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற பாலியல் கொடுமை செய்த வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது . இந்த வீடியோ பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர செயலுக்கு எதிர்கட்சியினர் மட்டுமின்றி ஆளும் பாஜகவினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சி நிற அமைப்புகள் சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களை நடத்தி தனது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் வெள்ளிக்கிழமை சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்ப்பட்டோர் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து தண்டவாதத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலை மறித்து மாணவர்கள் தண்டவாளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மணிப்பூர் கலவரத்த்தில் பெண்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும் உடனடியாக கலவரத்தை நிறுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.ஸ. இதனால் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் மற்றும் மீனம்பாக்கம் காவல் துறையினர் விரைந்து சென்று தண்டவளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குண்டு கட்டாக அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து சுமார் 20 நிமிடத்திற்கு பிறகு மின்சார ரயில் வழக்கம் போல் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மார்க்கத்தில் இயக்கப்பட்டது இதனால் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications