மீண்டும் பரபர! திரிஷாவுக்கு எதிராக மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கு: ஐகோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணை
சென்னை: நடிகை திரிஷாவுக்கு எதிராக மன்சூர் அலிகான் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
நடிகை த்ரிஷா குறித்து பாலியல் இச்சையை வெளிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக மன்சூர் அலிகான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மன்சூர் அலிகானின் பேச்சை த்ரிஷாவே கண்டித்திருந்தார். திரையுலகினர் பலரும் கடுமையாக கண்டித்திருந்தனர். நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். நடிகர் சங்கம் மன்னிப்பு கேட்கும் படி வலியுறுத்தியது.
இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைப்படி மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது. இதனிடையே மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் அவர் தான் பேசிய கருத்து த்ரிஷாவின் மனம் புண்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அதனால் மனம் வருந்தி த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கிறேன் என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். திரிஷாவும், மன்சூர் அலிகானை மன்னிப்பதாக சமூக வலைதளத்தில் சூசகமாக பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகை திரிஷா, தன்னை கண்டித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். முழு வீடியோவையும் பார்க்காமல் தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக குறிப்பிட்டிருந்தார்.
முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை அன்று, நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications