'வா புத்தாண்டே வாழ்த்துகிறோம் உன்னை!' கவிஞர் வைரமுத்து புத்தாண்டு வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளைய தினம் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் நாளைய தினம் கோலாகலமாகப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. 2021 முழுவதும் கொரோனா உடனான போராட்டமாகவே சென்ற நிலையில், 2022இல் உலகம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது.

 Many shares Poet Vairamuthu new year wish

புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "அறிவு வழிநடத்த.. துணிவு துணையிருக்க.. உழைப்பு செயல்படுத்த.. நேர்மை நிலைநிறுத்த.. என்ன செய்துறும் இன்னல் எம்மை? வா புத்தாண்டே வாழ்த்துகிறோம் உன்னை!

மலர்கொண்டு வா, கனிதந்து போ.. பன்பதை வாழ்க.. மானுடம் வெல்க" என்று புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து இந்த புத்தாண்டு வாழ்த்தை ட்விட்டரில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்,

மேலும், புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் 'தண்ணீர் தேசம்' நாவலில் வைரமுத்து கூறிய ஒன்றையும் இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

 Many shares Poet Vairamuthu new year wish

2012இல் வெளிவந்த தண்ணீர் தேசம் நாவலில், "அனுபவம் வேண்டுமா இளமையை இழ.. ஆயுள் வேண்டுமா போகம் இழ.. கவிதை வேண்டுமா உன்னை இழ.. காதல் வேண்டுமா இதயத்தை இழ.. வளர்ச்சி வேண்டுமா தூக்கத்தை இழ.. வரவு வேண்டுமா வியர்வையை இழ.. ஒன்றை இழந்தால்தான் இன்னனொன்று" என்று கவிஞர் வைரமுத்து எழுதியிருப்பார். புத்தாண்டையொட்டி வாழ்த்து தெரிவித்து இணையத்தில் பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+