சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு
சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் தலைமை பொறுப்பை மரியானா எல். நெய்ஷுலர் கடந்த மார்ச் 2-ஆம் தேதி திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டார்.
இது குறித்து பேசிய துணைத் தூதர் நெய்ஷுலர், "நமது இருதரப்பு உறவின் இந்த முக்கியமான தருணத்தில் தென்னிந்தியாவில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன்.

அதிபர் டிரம்ப், வெளியுறவுத்துறை செயலாளர் ரூபியோ மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கோர் ஆகியோரின் தலைமையின் கீழ், அமெரிக்கர்கள் மற்றும் இந்தியர்களுக்கு சிறந்த பலன்களை வழங்கும் கூட்டு செயல்பாடுகளை வலுப்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதற்கும், அமெரிக்க வணிகங்களை ஆதரிப்பதற்கும், நமது உறவை மிகவும் வலுவாக்கும் மக்களுக்கு இடையேயான தொடர்புகளை வளர்ப்பதற்கும் நான் செயலாற்றுவேன்," என்றார்.
சென்னைக்கு வருவதற்கு முன்னர் தாஷ்கண்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகராக துணைத் தூதர் நெய்ஷுலர் பணியாற்றினார். ஜெருசலேம் மற்றும் ஜோர்டனின் அம்மான் தூதரகங்களில் பொருளாதார துணை ஆலோசகராகவும், வாஷிங்டன் டி.சி., துபாய், ஸ்கோபியே மற்றும் மாஸ்கோவிலும் அவர் பணிபுரிந்துள்ளார்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் என்பது தமிழகம், கேரளம், கர்நாடகா, புதுவை, அந்தமான் நிகோபார் தீவுகளை உள்ளடக்கியது. தென்னிந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் டொனால்ட் டிரம்ப் விசா நடைமுறைகளில் கட்டுப்பாட்டை விதித்துள்ளனர்.
இந்த நிலையில் மரியானா, முந்தைய பணியின் போது கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் சென்னையில் விசா வாங்குவதற்கான காத்திருப்பு காலத்தை குறைப்பதற்கான நடவடிக்கையில் மரியானா ஈடுபடுவார் என சொல்லப்படுகிறது. அது போல் சென்னை தூதரகம்தான் வேலைக்கான விசாக்களை அதிக அளவில் கையாளும் மையமாக இருக்கிறது. அந்த வேலைக்கான விசாவிலும் டிரம்ப் அதிரடிகளை பிறப்பித்துள்ளார்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் 230 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. முன்பு பாரிமுனையில் இயங்கி வந்த நிலையில் இது அண்ணாசாலை ஜெமினி பாலத்தின் அருகே 1969ஆம் ஆண்டு மாற்றலானது.












Click it and Unblock the Notifications