Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டுக்கே ஹேப்பி.. மெகா சாதனை படைத்த சென்னை ஐசிஃஎப்.. ஒரே ஆண்டில் வரிசை கட்டிய ரயில் பெட்டிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய ரயில்வே உற்பத்தி திறன், ரயில் சேவைகள், பயணிகள் வசதிகள் அனைத்தும் மேம்பட்டு வரும் நிலையில் நம்முடைய சென்னை ஐசிஎப் முக்கிய சாதனை ஒன்றை புரிந்துள்ளது.. இந்திய ரயில்வே வளர்ச்சியில் முன்னணி நிறுவனமாக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஐசிஎப், இன்று மீண்டும் உலக ரயில்வே நிறுவனங்களை தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.. அது என்ன தெரியுமா?

சென்னையில் உள்ள ஐசிஎப் அதாவது இந்தியன் ரயில் கார்ப்பரேஷன் ஃபேக்டரி என்பது, உலகளவில் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும்.. இதுவரை 500க்கும் மேற்பட்ட வகைகளில், 75000க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வெளி வந்துள்ளது..

Chennai ICF Train Coaches Tamil Nadu

சென்னை ஐசிஎப் சாதனை

ஐசிஎப் அதில் பெரிதும் ஃபேமஸை பெற்று தந்தது வந்தே பாரத் ரயில்கள்தான்.. வந்தே பாரத் மட்டுமின்றி "வந்தே சதரன்", மெட்ரோ, அம்ரித் மெட்ரோ, எல்எச்பி, மெமு போன்ற பல ரயில்கள் பெட்டிகளையும் தயாரிக்கிறது. எனினும், பயணிகளை மிகவும் கவர்ந்திருக்கும் ரயில்கள், ஸ்லீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தான்.

ஐசிஎப் அதிகாரிகள் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது,நீண்ட தூர பயணிகள் கையாளும் வகையில், ஸ்லீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் தயாரிப்பை விரைவில் அதிகரிக்க உள்ளோம். இயற்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள் படிப்படியாக குறைக்கப்படுகின்றன, ஏனெனில் அவற்றுக்கான தேவையே போதுமானது என்று நம்பிக்கை தெரிவித்திருந்தனர்..

இதனால், பயணிகள் விரைவில், சுலபமான படுக்கை வசதி கொண்ட ரயில் அனுபவத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

அதிக ரயில் பெட்டிகள் தயாரிப்பு

அந்தவகையில் இந்தியாவிலும் உலகளாவிய அளவிலும் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக நம்முடைய சென்னை ஐசிஎப் திகழ்ந்து கொண்டிருக்கிறது.. ஆரம்பத்தில் நீல நிற ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில்,கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து துருப்பிடிக்காத எஃகு பெட்டிகளின் உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது.

அப்போது அடுத்த சாதனை என்னவென்றால், 2024-25 நிதியாண்டில் சென்னை ஐசிஎப் மொத்தம் 3,007 ரயில் பெட்டிகளை தயாரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 2,829 பெட்டிகளை தயாரித்ததைவிட 178 அதிகமாகும். இந்த சாதனை சென்னை ICF-க்கு மிகவும் முக்கியமானது. இதில் 1,169 பெட்டிகள் வந்தே பாரத் ரயில்களுக்கு தயாரிக்கப்பட்டது. இது சுமார் 40% பங்கு வகிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 5 மாத காலத்தில் 1484 ரயில் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் 17 அம்ரித் பாரத் ரயில் பெட்டிகள் அடங்குகின்றன.

புதிய சாதனை படைத்த ஐசிஎஃப்

இதுபோக, அம்ரித் பாரத் 3.0 ரயில் பெட்டிகளின் உற்பத்திக்கும் ஐசிஎப் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. AC மற்றும் ஏசி அல்லாத வகைகள் இரண்டுமே உள்ளன. அதேசமயம், EMU ரயில்களுக்கு 15 பெட்டிகளின் தயாரிப்பு பணிகளும் கடகடவென நடந்து கொண்டிருக்கிறது. அதேபோல 9 ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை முதலில் கருதியே புதிய தலைமுறை ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவை உபகரணங்களும் தொழில்நுட்பமும் நல்ல தரத்தில் உள்ளன... மொத்தத்தில் சென்னை ஐசிஎப் நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி திறன் இந்த ரயில் பெட்டிகளால் உலக அளவில் ஈர்த்து வருகிறது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+