Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெருகிய மேட்டூர் அணை.. 1 லட்சத்து 500 கனஅடி நீர் திறப்பு.. ஃபுல் அலர்ட் மோடில் காவிரி கரையோர மக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4வது நாளாக இன்று (ஜூலை 28) காலை 120 அடியாக நீடிக்கிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,00,500 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,00,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1.05 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Cauvery salem mettur

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.

கடந்த மாதம் ஜூன் 29 ஆம் தேதி மாலையில், தனது உச்சபட்ச நீர்மட்டமான 120 அடியை எட்டி இந்த ஆண்டில் முதல் முறையாக நிரம்பியது. அதன்பிறகு மீண்டும் கடந்த 5 ஆம் தேதி, 20 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் மேட்டூர் அணை நிரம்பியது. இந்த நிலையில் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து வெகுவாக அதிகரித்தது.

இதனால் மீண்டும் அணையின் அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்டியது நீர்மட்டம். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,00,500 கனஅடியாக உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,00,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கன அடி வீதமும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 82,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 400 கன அடியிலிருந்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.

இந்நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1.05 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கோரிக்கையின்படி, அரக்கோணத்தில் இருந்து 60 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள், திருச்சி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரைப் பகுதியில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+