இன்று எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள்.. ஈபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா தனித்தனியே மரியாதை!
சென்னை: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி எம்ஜிஆர் சிலைகளுக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டவர்கள் தங்களின் ஆதரவாளர்களுடன் தனித்தனியே மரியாதை செலுத்தினர்.
நடிகராக ஜொலித்த எம்ஜிஆர் திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். திமுகவில் பொருளாளராக இருந்த எம்ஜிஆர், அதன்பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அதிமுகவை அவர் உருவாக்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதல்வரானார்.
திரையுலகத்தில் கொடிகட்டி பறந்த எம்ஜிஆர் அரசியல் களத்திலும் ஜொலித்து முதல்வர் அரியணையில் அமர்ந்தார். இந்நிலையில் தான் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

தனித்தனியாக கொண்டாட்டம்
தமிழ்நாட்டில் உள்ள எம்ஜிஆர் ரசிகர்கள் பல இடங்களில் அவரது பிறந்தாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். எம்ஜிஆரின் போட்டோக்கள் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் எம்ஜிஆரின் பாடல்கள் இசைக்கப்பட்டு வருகிறது. அதிமுக சார்பில் ஆண்டுதோறும் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் தற்போது அதிமுகவில் உட்கட்சி மோதல் உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோர் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி அதிமுக தலைமை அலுவலகம் வாழை மரங்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

ஓ பன்னீர் செல்வம், டிடிவி, சசிகலா
இதேபோல் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சசிகலா, சென்னை திநகரில் உள்ள எம்ஜிஆர் இல்லத்துக்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நினைவிடம் அலங்கரிப்பு
இதற்கிடையே எம்ஜிஆரின் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மெரினா கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். வழக்கத்தை விட எம்ஜிஆர் நினைவிடத்துக்கு இன்று ஏராளமானவர்கள் சென்றனர். இதனால் அங்கு கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications