"ஆபாச நெடி".. பாஜக நடிகைகளிடம்.. திமுகவின் சைதை சாதிக் மன்னிப்பு கேட்க வேண்டும்.. ஹைகோர்ட் அதிரடி
பாஜக நடிகைகளிடம் திமுகவின் சைதை சாதிக் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஹைகோர்ட் கூறியுள்ளது
சென்னை: பாஜகவை சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக விமர்சித்த வழக்கில், சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய திமுக பேச்சாளர் சைதை சாதிக்குக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது... அதுவரை சைதை சாதிக்கை கைது செய்ய கூடாது என்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்டச் செயலாளர் இளைய அருணா உள்ளிட்டோர் பங்கேற்ற திமுக விழா நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், அந்த கட்சியின் நிர்வாகி சைதை சாதிக் கலந்து கொண்டு பேசும்போது, பாஜகவினரை கடுமையாக விமர்சித்து பேசினார்.. குறிப்பாக பாஜகவிலுள்ள குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராமன், கௌதமி ஆகிய 4 பேர் குறித்து தகாத வார்த்தையில் பேசி விமர்சனம் செய்திருந்தார்.

நடிகை செளந்தர்யா
"முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முகத்தை நன்றாக உற்றுப் பாருங்கள்... அப்படியே ஹட்ச் டாக்போலவே இருக்கும்... அமித்ஷாவைப் பார்த்திருக்கீங்களா, அம்மன் படத்தில் நடிகை சௌந்தர்யாவைக் கொலைசெய்ய வரும் ஜண்டாவைப்போலவே இருப்பார்... படத்தில் வரும் கறுப்பு ஜண்டாவும் நல்லது செய்யவில்லை, வெள்ளை ஜண்டாவான அமித் ஷாவும் மக்களுக்கு நல்லது செய்யவில்லை" என்று பேசியிருந்தார்.. பிறகு திடீரென நடிகைகளை பற்றி அவதூறாக பேசியவர், "நீங்க என்னப்பா... வம்புல மாட்டிவிட்டுருவீங்கபோல..." என கைதட்டியவர்களை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே விமர்சனமும் செய்திருந்தார்.

கலைஞரின் சீடர்கள்
சைதை சாதிக்கின் ஆபாச பேச்சு குறித்து அப்போதே கடுமையான கண்டனங்கள் எழுந்தன... இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட நடிகை குஷ்பு, 'பெண்களை ஆண்கள் இழிவுபடுத்தும்போது, அவர்கள் எந்த மாதிரியான மோசமான சூழலில் வளர்ந்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த ஆண்கள்தான் தங்களைக் கலைஞரின் சீடர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். இதுதான் முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியா?" என்று கேள்வியை கேட்டதுடன், அந்த ட்வீட்டை, திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழிக்கும் டேக் செய்திருந்தார்.

கலைஞர்
இதற்கு கனிமொழியும் உடனடியாக பதிலளித்திருந்தார்.. பெண்ணாகவும், மனித நேயத்துடனும் மன்னிப்பு கேட்பதாக கனிமொழி எம்பி அந்த டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதை சகித்துக்கொள்ளவே முடியாது என்றும் முதல்வர் ஸ்டாலினும் திமுகவினரும் இதை ஆதரிக்க மாட்டார்கள் என்றும் கூறியிருந்தார். எனது தலைவர் ஸ்டாலினும், எனது கட்சியினரும் இதை மன்னிக்கவே மாட்டார்கள் என்பதால் என்னால் வெளிப்படையாக இதற்கு மன்னிப்பு கேட்க முடிகிறது என்று கனிமொழி பதிவிட்டிருந்தார். இதற்கு உடனடியாக குஷ்பு நன்றி தெரிவித்திருந்தார்..

கனிமொழி
"உங்களது நிலைப்பாட்டையும், ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன் எனவும் பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கிறீர்கள் என பதிவிட்டார்.. இந்த இரு பெண்களின் நேர்மையான அணுகுமுறையும், ஒருவரையொருவர், நாகரீக பாணியில் பதிலளித்த விதமும், மக்களை கவனிக்க வைத்தன.. தமிழக மக்களை ஈர்க்கவும் செய்தன.. சைதை சாதிக் பேசியதற்கு, கனிமொழி இப்படி வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமே கிடையாது..

ஆபாச பேச்சு
ஆனாலும் தன்னுடைய கட்சிக்காரர் இப்படி பேசிவிட்டார் என்பதற்காக தார்மீக ரீதியாக பொறுப்பை எடுத்துக்கொண்டு, தவறு என்றும் சொல்லி கனிமொழி மன்னிப்பும் கேட்டிருந்தார். இதனிடையே, சைதை சாதிக் ஆபாசமாக பேசியது தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது... அதன் அடிப்படையில் காவல்துறை பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சைதை சாதிக் சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்..

பிரமாண பத்திரம்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, பெண்கள் குறித்து மனுதாரர் அவதூறான கருத்துக்களை தெரிவித்து இருப்பதால், இனிமேல் இதுபோல் பேசமாட்டேன் என, அவர் சம்மந்தப்பட்டவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், இந்த விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். அதுவரை சைதை சாதிக்கை கைது செய்யக்கூடாது என்றும் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி -
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள்.. ஒன்றில் மட்டுமே தனி சின்னம்! தொகுதி பங்கீடு கையெழுத்து -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ்












Click it and Unblock the Notifications