காலை சென்னை.. மதியம் மதுரை.. மாலை ராமேஸ்வரம்.. புயல் போல் சுற்றிச் சுழலும் அமைச்சர் அன்பில் மகேஷ்!
சென்னை: ஒரே நாளில் தலைநகர் சென்னை, மதுரை, ராமநாதபுரம் என மூன்று மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆய்வு நடத்தி கவனம் ஈர்த்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
அண்மைக் காலமாக எழுந்துள்ள தன் மீதான விமர்சனங்களுக்கு தனது செயல்பாடுகள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
அமைச்சர் மகேஷின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பலரும் தடுமாறி வருகிறார்கள்.

சென்னை நிகழ்ச்சி
போதை பொருள் எதிர்ப்பு பிரச்சார பயணத்தை சென்னையில் தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வி தொலைக்காட்சிக்கான புதிய வளாகம் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து SCERT திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மதிப்பீட்டு மையத்தை பார்வையிட்ட அவர் தேவையான மாற்றங்களை அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறினார். இப்படியாக காலை தொடங்கி நண்பகல் வரை சென்னையில் தனது துறை சார்ந்த அலுவல் பணிகளில் ஈடுபட்ட அமைச்சர் மகேஷ் அடுத்த நான்கரை மணி நேரத்தில் மதுரைக்கு சென்று நிற்கிறார்.

மதுரையில் ஆய்வு
இதனை அறிந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நடப்பது நிஜமா இல்லை கனவா என தங்களுக்குள் அமைத்திருக்கும் வாட்ஸ் அப் வட்டாரத்தில் ஆளுக்கொரு பதிவை போட்டுவிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு நடத்திக் கொண்டிருந்த கலைஞர் நினைவு நூலகத்திற்கு விரைந்தனர். அங்கு நூலக கட்டுமானப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்களுடன் கேட்டறிந்த அமைச்சர் மகேஷ், தேவையான சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

ராமநாதபுரம் பயணம்
காலை சென்னை மதியம் மதுரை, சரி இதோடு அமைச்சரின் நிகழ்ச்சி முடிந்துவிடும் என பார்த்தால் அடுத்த இரண்டரை மணி நேரத்தில் அமைச்சர் அன்பில் மகேஷின் கார் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் வந்து நின்றது. அங்கு இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்ப்ரைஸாக ஆய்வு நடத்திய அவர், தன்னார்வலரிடம் குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் இல்லம் தேடிக் கல்விக்கு கிடைக்கும் வரவேற்பு பற்றி கேட்டறிந்தார். இப்படியாக ஒரே நாளில் சென்னை, மதுரை, ராமநாதபுரம் என பல நூறு கிலோ மீட்டர் தூரம் பயணித்து சக அமைச்சர்களையே புருவம் உயர்த்த வைத்திருக்கிறார்.

அன்பில் மகேஷ்
அமைச்சராக இருந்து வெறுமனே நாட்களை மட்டும் நகர்த்திச் செல்ல தமக்கு விருப்பம் இல்லை என்றும் பள்ளிக்கல்வித் துறையில் பல சாதனைகள் படைத்து வரலாற்றை உருவாக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தது திரும்பிப் பார்க்கத் தக்கது.
-
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு!












Click it and Unblock the Notifications