டுடே ஸ்பெஷல் டே! தாயிற் சிறந்த கோவிலும் இல்லை! அதிகாலையிலேயே அம்மாவிடம் ஆசி வாங்கிய அன்பில் மகேஷ்!
சென்னை: பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்னர் தனது தாயாரிடம் ஆசி பெற்றிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
அதேபோல் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களிலும் மலர்கள் தூவி மரியாதை செலுத்திய பிறகே சட்டசபைக்கு சென்றார் அன்பில் மகேஷ்.

ஆண்டுதோறும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்களும், புதிய அறிவிப்புகளும் வெளியாகும்.
எந்தெந்த துறைகளில் மானியக் கோரிக்கை நடைபெறுகிறதோ அந்தந்த நாட்களில் அமைச்சர்களுடைய ஆதரவாளர்கள் சென்னையில் திரண்டு வாழ்த்துக் கூறுவார்கள்.
அமைச்சர்களும் சொந்த மாவட்டத்திலிருந்து வந்திருக்கும் கட்சிக்காரர்களுக்கு மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது சென்னையில் தடபுடல் விருந்து வைப்பார்கள்.
இதனிடையே பள்ளிக்கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெறும் நிலையில், அடுத்த ஓராண்டுக்கான பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
இதையொட்டி அதிகாலையிலேயே தனது அம்மாவிடம் ஆசிபெற்ற அவர் அதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்திலிருந்து வந்திருந்த கட்சிக்காரர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றுக்கொண்டார்.
அதேபோல் சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பிறகே சட்டசபைக்குள் சென்று அமர்ந்தார்.












Click it and Unblock the Notifications