முதலமைச்சரின் பி.ஆர்.ஓ நான்தான்.. ஸ்டாலின் சொன்னது கரெக்ட் - அமைச்சர் ஜெயக்குமார் 'பளிச்'

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் 7-வது நாளாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பழைய வண்ணாரப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய பின்னர் சைக்கிள் ரிக்ஷாவில் அமர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

minister jayakumar accepted he is PRO for cm palaniswamy as mk stalin said

இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் பகுதியில் நடந்து சென்றும் குழந்தைகளை தூக்கி கொஞ்சியபடியே பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்தும், மலர்களை தூவியும் ஆரத்தி எடுத்தவாறும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், சிறுபான்மை மக்களின் ஆதரவு அதிமுக விற்கு அதிகமாக உள்ளது என்றார். மேலும், முதலமைச்சரின் பி.ஆர்.ஓ அமைச்சர் ஜெயக்குமார் என ஸ்டாலின் கூறியதற்கு நான் பெருமைப்படுகிறேன்.

அப்படியெனில், அரசின் திட்டங்களை தான் நான் மக்களிடம் கொண்டு ‌சேர்க்கிறேன் என்று அர்த்தம் என்றார். மேலும், இலங்கையில் இனப் படுகொலைக்கு திமுக தான் காரணம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

முன்னதாக அவர், எம் ஜி ஆரின் 'வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்' பாடலை முழுவதுமாக பாடி அசத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+