நீட் எழுதிய மாணவர்களின்.. மன அழுத்தத்தை போக்க புதிய திட்டம்.. அமைச்சர் மா.சு தொடங்கி வைத்தார்
சென்னை: நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் அவர்களுக்குத் தொலைப்பேசி வழியே ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே அனைத்து மருத்துவ படிப்புகளுக்கான இடங்களும் நீட் மூலமே நிரப்பப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இங்குள்ள அனைத்து கட்சிகளும் முன் வைத்துள்ளன.

மாணவர் தற்கொலை
இருப்பினும், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு தர முடியாது என்பதில் மத்திய அரசு திட்டவட்டமாக உள்ளது. இந்தச் சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதினர். நீட் தேர்வு நடைபெற்ற அன்று காலை அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

மன அழுத்தம்
அதேபோல நீட் எழுதிய பிறகு, குறைவான மதிப்பெண்கள் பெற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் நேற்று மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக நிகழும் மாணவர் தற்கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் மத்தியில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவே தற்கொலைகள் நடைபெறுகின்றன.

புதிய திட்டம்
இந்நிலையில், மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த, அவர்களுக்கு மன நல ஆலோசனை கொடுக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை இன்று காலை 10.30 மணியளவில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 104 மருத்துவ தகவல் மற்றும் மன நல ஆலோசனை மையத்தில் (104 call centre) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
Recommended Video

நீட் விலக்கு தீர்மானம்
முன்னதாக தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தீர்மானம் கடந்த திங்கள்கிழமை சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த இந்த தீர்மானத்திற்கு அதிமுக, பாமக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஆதரவை அளித்தன. அதேநேரம் நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக, வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications