'ஒன்னும் சரிப்பட்டு வராது..'நாமே நேரா போய் மீட் பண்ணிட வேண்டியதுதான்.. திடீரென டெல்லி செல்லும் மா.சு
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாத நிலையில், வரும் வியாழக்கிழமை இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் வேக்சின் பணிகளை மாநில அரசு வேகப்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் மத்தியிலும் கொரோனா வேக்சின் பற்றிய நம்பிக்கை அதிகரித்துள்ளதால், பல மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகாலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நிற்கின்றனர்.

வேக்சின் பற்றாக்குறை
இருப்பினும், மாநிலத்தில் நிலவும் வேக்சின் பற்றாக்குறை காரணமாகத் தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வேக்சின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், முதல் டோஸ் வேக்சின் எடுத்துக் கொண்டவர்களுக்கும் சரியான நேரத்தில் இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லி பயணம்
இந்நிலையில், இன்று கிண்டி கிங் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் இப்போது கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை. இதனால் வேக்சின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்திற்குக் கூடுதலாக வேக்சின் அளிப்பது தொடர்பாக வரும் வியாழக்கிழமை (ஜூலை 8) டெல்லி சென்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசுகிறோம்.

அதிமுகவுக்கு அழைப்பு
இதற்காக நானும், செயலாளர் ராதாகிருஷ்ணனும் டெல்லி செல்கிறோம். மாநிலத்தில் நடைபெறும் தடுப்பூசி பணிகள் குறித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குறை கூறி வருகின்றனர். அப்படிக் குறை சொல்லும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் எங்களுடன் வரலாம். உங்கள் கூட்டணி தலைவர்கள் தானே மத்திய அரசில் இருக்கிறார்கள். நீங்களும் வந்து பேசி கூடுதல் தடுப்பூசிகளைப் பெற்றுத் தந்தால் அனைவருக்கும் நல்லது தான்.

தடுப்பூசி வீண்
அதிமுக ஆட்சியில் நான்கு லட்சம் தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் மத்திய அரசு அனுப்பிய வேக்சின்களை காட்டிலும் கூடுதலாக 1.5 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதாவது ஒரு குப்பியில் வேஸ்டேஜ்யைும் கணக்கிட்டு 16-24% வரை கூடுதலாக மருந்தை அனுப்புவார்கள். வேஸ்டேஜ்கள் பூஜ்ஜியம் ஆக்கப்பட்டதால் அதிக நபர்களுக்கு வேக்சின் போட முடிகிறது" என்று அவர் கூறினார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications